Coimbatore

News June 7, 2024

கோவை மத்திய சிறைக்குள் கஞ்சா வைத்திருந்த கைதி

image

கோவை மத்திய சிறையில் போலீசார், சிறைக்குள் நேற்று சோதனை நடத்தினர். அதில், வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் கைதி ஒருவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தண்டனை கைதியான கோவையை சேர்ந்த ரஹீம்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News June 7, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பேரூா் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள மணிமஹால் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் ஜூன்.12-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

முக்கிய அணைகளின் நீர்மட்ட விபரம்

image

பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று(ஜூன் 7) காலை 8 மணி நிலவரப்படி, சோலையாறு அணையின் நீர்மட்டம் 40.34 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 12.03 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 78.65 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.82 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 7, 2024

அரசு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை – கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசு கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கென 26 விடுதிகள் நடத்துகிறது. பள்ளி விடுதியில் சேர வரும் 14-ம்தேதிக்குள்ளும் , கல்லூரி விடுதியில் சேர 15-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்

News June 7, 2024

ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10, 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News June 7, 2024

பள்ளியில் 81,93,452 ரூபாய் பண மோசடி செய்த பெண்

image

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியின் பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளியில் கணக்கு வழக்குகளை பார்த்த பொழுது, அதில் 81 லட்சத்து 93 ஆயிரத்து 452 ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பள்ளியின் கண்காணிப்பாளர் தெய்வானை என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 6, 2024

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

மலேசியாவில் உள்ள Lincoln பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்ற கோவை SSVM பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் நிகிலேஷ் , ஹரிஸ் கார்த்தி, ஹரி ஷர்வேஷ் , அபய், ஷஸ்வத் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தனர்.

News June 6, 2024

கோவை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

43 வியாபாரிகளுக்கு நோட்டீஸ்

image

கோவை மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள் , பொட்டல பொருள்கள் சட்டத்தின்கீழ் பொட்டலமிடுவதற்கான உரிய பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது என எடையளவில் முரண்பாடு குறித்து 43 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 6, 2024

புது பொலிவுடன் கூடைப்பந்து மைதானம்

image

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம், கோவை மாநகராட்சி இணைந்து கூடைப்பந்து மைதானத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்து கடந்த மார்ச் மாதத்தில் பணியை துவங்கினர். மைதானம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு நேற்று அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிக்காக திறக்கப்பட்டது. கூரையில் 50 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!