India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற சிவரஞ்சனி, கார்த்திகா, சந்தியா, ஹரிஹரன் ஆகியோருக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின், தனித்துணை ஆட்சியர் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது. சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (ஜூன்.13), (ஜூன். 14) ஆகிய 2 நாட்கள் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில், பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் ஏழை, எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்படுகின்றனர். தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக்க வேண்டாம், மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டதாக இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் மண் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயக்கப்படும் ரயில், இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ஆம் தேதி வடகோவை ரயில் நிலையத்தோடு ரயில் நிறுத்தப்படும். அதேபோல் கோவையில் இருந்து இயக்கப்படும் மறுமார்க்க ரயில் வடகோவையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இல்லம், வருமானவரித்துறை அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு காலை, மாலை வேலைகளில் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் இருந்த சந்தன மரம் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை விமான நிலைய அதிகாரிகள் நேற்று வழக்கமாக பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.73,80,000 மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பயணி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, பணி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஞாயிறன்று பணியாற்றும் ரேஷன் பணியாளர்கள் மாற்று விடுமுறை எடுக்க அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வர் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கிட வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை திருநங்கைகள் பயன்படுத்தி பயன்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.