India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் இன்று (ஜுன்12) மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை, மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கண்டு தங்களது கிராம வருவாய் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் பதிவாகியுள்ளன. இதில், பொதுமக்கள் ரூ.53.07 கோடி பணம் இழந்துள்ளனர். ரூ.4.31 கோடி பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை நல்லறம் அறக்கட்டளை பயிற்சி மையத்தில் TNPSC Group II மற்றும் Group IIA தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன இதற்கான மாணவர் சேர்க்கை இன்று (ஜுன்12) நடைபெற்று வருகிறது தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவ மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைந்து, தங்களின் அரசுப்பணி கனவை நனவாக்கிக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை சந்திப்பு வரும் 11 ரயில்களின் சேவைகளில் நாளை 13ம் தேதி மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளை கோவை வழியாக இயக்கப்படும் ரயில் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இதே போல கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது.
கோவை, சென்னை, மதுரை, புதுவையில் வரும் 17ம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோவையில் (ஜூன் 12) இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் நீலியம்மாள் நகரை சோ்ந்தவா் முத்துகுமாா்(37). தனியாா் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் அங்கு விசாரணை செய்ததில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பலரிடம் கடன் பெற்று பணத்தை அதில் இழந்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று (ஜுன்11) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இன்று (12.06.2024) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஏற்க உள்ளதாக கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், என 9 குளங்கள் உள்ளன. குளம் உட்பட பெரும்பாலான குளங்கள், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன மாநகரின் நீராதாரத்தை அதிகரிக்கச் செய்யும் குளங்கள் அத்தனையும், ஆகாயத்தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன இந்த நிலையில் நேற்று குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.
செய்தி – மக்கள் தொடர்பு துறை சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில் 34 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.10,05,915 வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.