India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் – பாலக்காடு இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8:55 மணிக்கு பாலக்காடு செல்கிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் மதியம் சுவாமி தரிசனம் செய்து விட்டு, ரயில் மூலமாக சொந்த ஊர் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரயில் புறப்படும் நேரத்தை 13.20 மணியாக மாற்றி அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன். 17ஆம் தேதி திங்கட்கிழமை கோவை பூ மார்க்கெட் லங்கர்கானா அருகில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் வளாகத்தில் உள்ள ஈத்கா திடலில் காலை 08.30க்கு ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும். என ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 15 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி உட்பட முப்பெரும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவிற்கான மேடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் முத்துசாமி அருகில் இருந்து துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியை முழுவதுமாக சோதனையிட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன்.15 ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் குறித்த கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி நேற்று தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு நடந்தது. இங்கு 5 பாட பிரிவுகளில் உள்ள 240 இடங்களுக்கு 6154 விண்ணப்பங்கள் வந்திருந்தன. பி.எஸ்சி கணினி அறிவியல், கணித பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடந்தது. இங்கு விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவிகளுக்கு சீட் கிடைத்தாலும் வெளியில் தங்கினால் செலவாகும் என்பதால் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி-மயில்சாமி தம்பதியினர். இவரது திருமணத்தை படம் பிடிக்க நாட் போட்டாகிராபி என்பவரிடம் ஒப்படைத்தனர். இதற்காக முன்பணம் ரூ.1,35,000 வழங்கினர். ஆனால் போட்டாகிராபி கடைக்காரர்கள் கல்யாண வீடியோ, புகைப்படத்தை தரவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர் வழங்கிய பணத்துடன் ரூ.2,50,000 இழப்பீடு வழங்க நேற்று உத்தரவிட்டார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அழைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்ற தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கை தீரர்களே திரண்டிடுக ” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில, மற்றும் துணை அமைப்பாளர்கள் மேற்கொள்ளும் கட்சி பணிகள் தொடர்பாக மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அந்த வகையில் கோவை லீ – மெரிடியன் ஹோட்டலில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. முதலில் நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது,சொல்லவும் கூடாது. வாக்களிக்கும் தகுதி கொண்ட இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தேர்தலில் போட்டியிடலாம் எந்தப் பதவிக்கும் வரலாம் என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று(ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.