India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கன்னியாகுமரி – திப்ருகா் மற்றும் திப்ருகா் – கன்னியாகுமரி விரைவு ரயில்கள் வாரத்துக்கு 5 முறை கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. ஜூலை 12 ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர் கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் என்பது கிடையாது. இருப்பினும் மாநகரில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம் . வேறு வழிகளிலிருந்து கள்ளச்சாராயம் உள்ளே வந்து விடாமல் இருப்பதற்காக சோதனை சாவடிகளில் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று கோவையில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடினார். இதில் மெத்தனால் பயன்படுத்தும்போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் எவ்வாறு நெறிமுறைப்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று கோவையில் மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை சார்ந்தவர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடினார். இதில் மெத்தனால் பயன்படுத்தும்போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தாமல் எவ்வாறு நெறிமுறைப்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடைபெறவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா். இதற்காக சென்னையிலிருந்து இன்று இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா் அங்கிருந்து காா் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறாா் . தொடர்ந்து நாளை நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகின்றது. கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என நேற்று (ஜுன்.19) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மில்லிங் செய்த சாலையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு. வடகோவை – டாடாபாத், மேற்கு பவர்ஹவுஸ் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பழைய தார் சாலையை கடந்த 1 மாதத்திற்கு முன்பு மில்லிங் செய்தனர். அதனால் இந்த சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் இந்தப் பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளின் பெயர்களில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்றால், பள்ளிகளின் பெயர்களில் மத அடையாளங்களும் இருக்கக் கூடாது. பள்ளிகளின் பெயர்களில் இருந்து ஜாதி அடையாளங்கள் நீக்கப்படும் போது, மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும். அதுவே, உண்மையான சமூக நீதி, சந்துரு குழுவின் பரிந்துரையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.