India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை அரசு கல்லூரி முதல்வர் நேற்று கூறுகையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் 291 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாணவர்களின் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் பணி உள்ளிட்டவை நடந்து வருகின்றன. கலந்தாய்வு நிறைவடைந்த பின்னர் அரசு அறிவுறுத்தலின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை.3 ஆம் தேதி துவக்கப்படும் என்றார்.
கோவை எஸ்பி பத்ரிநாராயணன் நேற்று கூறுகையில், மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,092 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர 203 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்திற்கு புறமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக் குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் 2024ஆம் மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் ஜூன்.19ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரால் நடத்தப்பட உள்ளது என்றார்.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன்.21) தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை உட்பட 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று கூறுகையில் மாவட்ட பகுதியில் போலீஸாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கள் மற்றும் கள்ள மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் ரீதியிலான பயன்பாட்டுக்காக மெத்தனால் பயன்படுத்தும், இருப்பு வைத்திருக்கும் 11 நிறுவனங்களை அழைத்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் கலந்து கொள்ள இணையமச்சர் எல்.முருகன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு தினம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவா் அா்ஜுன் சம்பத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் இதில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து இறந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குடிப்போரை ஊக்கப்படுத்துவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.