India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள பொடானூர்-இருகூர் ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் டெய்லி எக்ஸ்பிரஸ் வழியாக பின்வரும் ரயில் சேவைகள் திருப்பி விடப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜேஎன்-கேஎஸ்ஆர் பெங்களூரு டெய்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் வழியாக 16, 18, 20, 23, 25, 27 & 30 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு 1000 மூத்தகுடிமக்கள் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை hrce.tn.gov.in என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை செளரிபாளையத்தில் உள்ள சின்னசாமி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பத்தை வளர்க்க செயலாற்றி வருகிறார். 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் இவர் எவ்வித கட்டணம் வசூலிக்காமல் போட்டிகளுக்கும் அழைத்து சென்று வருகிறார். உலக சிலம்பம் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் அண்மையில் சென்னை கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி சிலம்பம் செம்மல் விருதினை இவருக்கு விருது வழங்கினார்.
பேரூர், மேட்டுப்பாளையம், அன்னுார், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகா உட்பட 20 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடத்தில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றாலோ பணியில் சேராமல் இருந்தாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரயில்வே துறை அதிகாரிகள் இன்று(ஜூலை 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை – திருவனந்தபுரம் ரயில் சென்னையில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயிலானது நாளை(ஜூலை 15) முதல் சென்னையில் இருந்து நாள்தோறும் இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு 11.55, கோவைக்கு மறுநாள் அதிகாலை 2.25 வரும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பிரதான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை 13) நடைபெற்றது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 11,455 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 13 இடங்களில் 38 மையங்களில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 6,955 பேர்(60 சதவீதம்) கலந்து கொண்டு தேர்வெழுதினர். 4,500 பேர் தேர்வெழுத வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர், மாவட்ட பாஜக நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் நேற்று(ஜூலை 13) இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணா பிரசாத் தலைமையில் புகார் மனு அளித்தனர். அதில், இளைஞர் காங்., சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர். காங்., மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு காணப்படும் நிலையில் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மே 1ஆம் தேதி முதல் இன்று வரை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 113 நபர்களை கைது செய்து 70 பேர் மீது வழக்குபதிவு செய்தும், 43 நபர்களை எச்சரிக்கை செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 191கிலோ 325 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி பத்ரிநாராயணன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்குள்ளாக இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சரண்யா. இவரது மகன் சர்வஜித்நாராயணன்(12). ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரில் ஏறி சர்வஜித் அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஏழு நிமிடங்கள் 20 விநாடிகள் செய்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இன்று இடம் பிடித்தார்.
Sorry, no posts matched your criteria.