India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் (ஜூன்.25)இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகள் விஜயகுமாரி. இவர் நேற்று (ஜுன்.24) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது தந்தை பொதுமக்களுக்காக 43 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். அந்த இடத்தை ஈசா யோகா மையத்தினர் தற்போது ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களை விரட்டி அடித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities’ என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் ஆகிய பகுதிகள் உள்ளது என இன்று ஆட்சியர் கூறினாா்.
கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாயன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் நாளை (ஜூன்.25) வழக்கமாக நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மாநகராட்சி பொது நிதி ரூ.41.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், கவுன்சிலர் செல்வி.நிவேதா சேனாதிபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவில் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி உள்ளனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த இபிஎஸ், ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், இபிஎஸ் மீது கோவை ஜேஎம்.1 நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவை விமான நிலையம் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகவும், சர்வதேச விமான நிலையமாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் சோதனை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக்கோரிக்கையில் வெளியிடப்பட்ட 63 அறிவிப்புகளில், சென்னைக்கு 22 திட்டங்களும், கோவைக்கு இரண்டே இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன. . லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றியை வாரி வழங்கியும், கோவை பெருநகரத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அப்பட்டமாகப் புறக்கணித்திருப்பது உறுதியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.