India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 20 – 28 ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற்றது. இதில், கோவை வடக்கில் 2,076, அன்னூரில் 1,502, மேட்டுப்பாளையத்தில் 2,535, கோவை தெற்கில் 362, சூலூரில் 1,217, மதுக்கரையில் 1,035, பேரூரில் 1,665, பொள்ளாச்சியில் 1,081, ஆனைமலையில் 571, கிணத்துக்கடவில் 890, வால்பாறையில் 191 என மொத்தம் 13,176 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.168 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கின. முதல் தளம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.12 ஆம் தேதி திறந்துவைத்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜூலை 1 ஆம் தேதி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா நேற்று தெரிவித்தார்.
பேரூர் காவல்துறை டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் வெற்றிச்செல்வன்(56). இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் திடீர் நெஞ்சுவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை மீண்டும் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள்சாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024 ஆம் ஆண்டு காரிபருவத்திற்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் பொது இ-சேவை மையங்களில் பீரிமியத் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டில் விவசாயம், தொழில் கடன் என பல பிரிவுகளில் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனைமலை வட்டாரத்துக்கான வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் தொடா்பான ஆய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அவர் கோவை மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய மின்சார நாள் ஜூன் 26ஆம் தேதியும், மின்சார பாதுகாப்பு வாரம் ஜூன் 26 – ஜூலை 2ஆம் தேதி வரையும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே கோவை மின்வாரியம் சார்பில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான வயர்கள், மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக் வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே தகுதியுள்ளோர் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி அவற்றை பூர்த்தி செய்து தங்களது சான்றிதழ்களின் நகல் மற்றும் புகைப்படத்துடன் ஜூலை 9 க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.