Coimbatore

News March 25, 2025

BREAKING: வெள்ளிங்கிரி மலையில் பக்தர் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை, வெள்ளியங்கிரி மலையை ஏறி கீழே இறங்கும் போது திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா என்பவர் 3வது மலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும் இவர் ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும் அறுவை சிகிச்சை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆலாந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2025

கோவை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

கோவை: தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச்.31ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும், கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மிஸ் பண்ணிடாதீங்க. SHARE பண்ணுங்க

News March 24, 2025

தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

image

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 24, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் செய்க.<<>> இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

News March 24, 2025

ஹெல்மெட் போட்டாதான் அனுமதி

image

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கோவை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

image

கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் நடைபெற்ற வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாமில் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. கடந்த மார்ச்.17ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 6 முதல் 12 மாதம் உள்ள 36,715 குழந்தைகளுக்கும், 1 முதல் 3 வயது வரை உள்ள 89,994 குழந்தைகள் என மொத்தம் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

கோவையில் வேலை வாய்ப்பு! இன்று கடைசி நாள்

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

“2026ல் தமிழகத்தை ஆளப்போகிறோம்”

image

வரும் மார்.28ல் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை பாபு சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘ பொதுக்குழுவில் கூட போறோம் – 2026இல் தமிழகத்தை ஆளப்போகிறோம்’ ‘ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டுள்ளன.

News March 24, 2025

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

image

வெள்ளியங்காடு அடுத்துள்ள பில்லூர் அணை மாட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு  மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

image

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!