Coimbatore

News July 16, 2024

கோவை குற்றாலம், கவியருவிக்கு செல்ல தடை

image

வனத்துறையினர் நேற்று(ஜூலை 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆதலால் ஆழியார் கவியருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றுள்ளனர்.

News July 16, 2024

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கோவை மாவட்டம் முழுவதும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

போதைப் பொருள் விற்ற 126 பேர் கைது

image

கோவை எஸ்பி அலுவலகம் நேற்று(ஜுலை 15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த மே.1 முதல் இன்று வரை கோவை மாவட்ட காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 192.970 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த கலெக்டர்

image

சுல்தான்பேட்டையில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர்(ஜூலை 15) துவக்கி வைத்தார். சுல்தான்பேட்டை ஒன்றியம், லட்சுமி நாயக்கன்பாளையம், சந்திராபுரம், குமாரபாளையம் பகுதிகளில் அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இதில் கணபதி ப.ராஜ்குமார் எம்.பி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் அநேக இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 15, 2024

கோவை தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

image

கோவை மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், “தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ  மாணவர்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கல்வி கட்டண பட்டியலை மாணவா்கள், பெற்றோா்கள் பார்க்கும்படி அறிவிப்பு பலகையில் ஒட்டி அதன் புகைப்பட நகலை மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பெற்றோர்களுக்கு இமெயில், வாட்ஸ்அப் மூலம் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 15, 2024

கோவையில் காலை உணவு திட்டம் துவக்கம்

image

காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, கோவை  தென்னமநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில்  காலை உணவு திட்டத்தை திமுக மாவட்ட செயலாளர் தொ.அ ரவி இன்று துவக்கி வைத்தார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

கோவை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 100 அடியில் 87 அடியில் நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3041 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும், 6000 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 15, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் நாளை (ஜூலை 15) முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் (ஜூலை 15,16) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 14, 2024

கோவையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

image

சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக இன்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!