India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மருதமலை திருக்கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மூலமும் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான ரயில் சேவை நேற்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 10.22 மணியளவில் சேலம் ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் வரும் 6ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு (02.08.2024 முதல் 04.08.2024 வரை) மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை (லிட்) மேலாண் இயக்குநர் நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு (02.08.2024 முதல் 04.08.2024 வரை) மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை(லிட்) மேலாண் இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் அரசு பிற்பட்டோர் நல மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு உரிய வசதிகள் உள்ளனவா என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவியர்களிடம் இங்கு எதாவது குறைகள் உள்ளனவா, உணவுகள் தரமானதாக உள்ளதா என்று கேட்டறிந்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வழியாக துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்கள் மேற்கூறிய பல்கலைக்கழகங்களின் இளமறிவியல் (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் 02.08.2024 முதல் 11.08.2024 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள முகப்பில் திறக்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் விமானப்படை நிர்வாக கல்லூரி ஆகியவை சார்பில் கோவையில் விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் போர் விமானங்கள் செயல்படும் முறை குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், விமானப் படையின் சிறப்பு வாகனங் களின் மாதிரிகள் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாட பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் இன்று முதல் தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்க உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.