Coimbatore

News July 19, 2024

கோவையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

image

கோவையில் இருந்து டானாபூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கபட உள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து பீகாரில் உள்ள டானாபூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 21ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 24ஆம் தேதி மதியம் 01.30 மணிக்கு டானாபூரை சென்றடையும் என இன்று தெரிவித்துள்ளனர்.

News July 19, 2024

கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 25 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 முதல் 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது

News July 19, 2024

தமிழ் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்- சத்குரு

image

தமிழ்நாடு தினத்தையொட்டி நேற்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில், “பக்தியின்றி தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கும் தமிழ்நாட்டில் குழந்தை பிறந்தாலும் பக்தி; காது குத்து என்றாலும் பக்தி; திருமணம் செய்தாலும் பக்தி; வாழ்ந்தாலும் பக்தி; இறந்தாலும் பக்தி; எனவே தமிழ் கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 19, 2024

கோவையில் இன்று ஆரஞ்சு அலர்ட்

image

கோவை மாவட்டத்தில் பருவ மழை மிக தீவிரமடைந்து பலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான கோவை வீரர்கள்

image

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சாா்பில் சப் ஜூனியா், ஜூனியா்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் 17 வயது பட்டர்பிளை பிரிவில் கோவை வீரர் அகில் பாலாஜி தங்கமும், 14 வயது ப்ரீ ஸ்டைல் பிரிவில் கோவை வீராங்கனை ஸ்ரீசம்ருதா வெள்ளியும் வென்றதால் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து, இருவரையும் நேற்று பயிற்சியாளர் மற்றும் சங்கத்தினர் பாராட்டினர்.

News July 19, 2024

கோவை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

image

கோவை மாவட்டம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பலப்பகுதிகளில் மண் அரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக ஒரு வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. இதில், கணேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

News July 19, 2024

கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 11 பேர் கைது

image

கோவை குனியமுத்தூா் காவல் நிலைய எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீஸாா் குளத்துப்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கேரளாவை சேர்ந்த முகமது ஜியாவுதீன், சுனில், அப்துல் கலீம்,சமீர், ஜமால், ஷாஜகான், முகமது அனஸ் உட்பட 11 பேரை விசாரித்ததில் அங்குள்ள வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரிந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்தனர்.

News July 19, 2024

கோவையில் 3 கல்லூரி மாணவர்கள் பலி

image

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கனியூரில் நேற்று முன்தினம் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லூரி மாணவர்களான மேகவிஷால், பூபேஷ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கருமத்தப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 19, 2024

கோவை பேருந்தில் புதிய வசதி அறிமுகம்

image

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் 47 பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றின் மூலம் இயக்கப்படும் 2,700 பேருந்துகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி நடக்கிறது. இதனால் அரசு பேருந்து வரும் இடத்தை பயணிகள் அறிந்து கொள்ள வசதியாக “சலோ” என்ற செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது என கோவை கோடட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே இத்திட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News July 19, 2024

கோவையில் நடப்பாண்டில் 43 பேர் மீது குண்டாஸ்!

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 43 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

error: Content is protected !!