Coimbatore

News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

image

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார். உடனே SHARE பண்ணுங்க

News March 26, 2025

மேட்டுப்பாளையம்: திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

image

மேட்டுப்பாளையம், தெவக்கரை புதூரை சேர்ந்தவர்கள் அர்ஜுனன்-ருக்குமணி தம்பதி. இவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தில், தனியார் தோட்டத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஊருக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2.25 சவரன் தங்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு திருடு போனது தெரிந்தது. இப்புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

News March 25, 2025

கோவையில் பாலியல் தொழில்: 3 பேர் கைது!

image

கோவை சரவணம்பட்டி உள்ள ஒரு பியூட்டி பார்லரில், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட சபீபுல்லா (53), சங்கீதா ஷர்மா (25), சோனா (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2025

கோவை மக்களே இத குடிக்காதீங்க! எச்சரிக்கை

image

கோவை மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி, குடை பயன்படுத்தவும். மேலும் காலணி அணிந்து செல்ல வேண்டும். பின் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News March 25, 2025

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

image

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செல்வம் ஐஏஎஸ், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சிறப்பு மற்றும் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் 4,611 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

image

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.

News March 25, 2025

ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.

News March 25, 2025

கொங்கு நாட்டு விலங்கு! கின்னஸ் சாதனை

image

கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!