India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கு 96 கவுன்சிலர்கள் திமுக (ம) திமுக கூட்டணியை சேர்ந்தவர்களும், அதிமுக 3 பேரும், எஸ்டிபிஐ 1 என 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 93 பேர் புதிய கவுன்சிலர்கள், 7 பேர் மட்டுமே இதற்கு முன் கவுன்சிலர்களாக இருந்து அனுபவம் உள்ளவர்கள். எனவே, மேயர் போட்டி இன்றி தேர்வாக வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த மேயர் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இதில், கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் (400 மீ தொடர் ஓட்ட பிரிவு) இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ஒரு டிரக் டிரைவர், தாய் மீனா வீட்டு வேலை செய்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், 3 முறை தேசிய பட்டமும், சர்வதேச பதக்கங்களையும் பெற்றார். இவர் பி.டி.உஷாவின் சாதனை சமன் செய்தவர். இவர் பெற்றி பெற வாழ்த்துகிறோம்.
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று, பொள்ளாச்சி, இராமபட்டினம் ஊராட்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மகளிர் குழுவை சேர்ந்த வசந்தாமணி விவசாய பயன்பாட்டிற்காக ஆளில்லா விமானம் என்றழைக்கப்படும் “ட்ரோனை” தயாரித்தனர். இதனை இயக்கி அதன் செயல்பாடு குறித்த செயல்விளக்கத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் செய்து காண்பித்தார். இதனை கண்ட கலெக்டர் இவரது முயற்சியை பாராட்டினார்.
கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தீவிபத்தில், தீயை அணைப்பதற்கு ஏற்பட்ட செலவு கணக்குகளை இன்று மாமன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் மொத்த செலவு ரூ.76.70 லட்சம் எனவும் 11 நாள் டீ, காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27.51 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது தற்போது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வடகோவை பகுதியில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். பின்னர், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்து பாஜக அரசைக் கண்டித்து, தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி, நாளை சிவானந்தா காலனி, டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு கோவை 4 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் சிறையில் இருந்த நிலையில் அவரது வழக்கறிஞர் ஜாமின் மனுவை விண்ணப்பித்திருந்தார். இதனை ஏற்ற கோவை நீதிமன்ற நீதிபதி பல்வேறு நடவடிக்கைகளை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தார். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கேரளம் ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுநர்களுக்கு பரிசோதனை நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வனத்துறையினரின் அனுமதியுடன் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர்.
கோவை மாநகராட்சியின் புதிய மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேயர் மற்றும் நிலை குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டமும், 6ம் தேதி அன்று காலையில் நடைபெறும் எனவும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான கூட்டமும் அன்றைய தினம் பிற்பகல் 2.30க்கு நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறினார்.
தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று(ஜூலை 26) முதல் ஜூலை 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோவை கோட்டத்தில், திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.