Coimbatore

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் பொறுப்பேற்பு

image

கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 14, 2024

கோவைக்கு வந்தார் புதிய எஸ்பி

image

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதற்கான கோப்புகளில் கையெழுத்து இட்டு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முன்னதாக காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.

News August 14, 2024

ஆட்சியரின் சமூக வலை தளத்தில் நேரலை

image

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா மாவட்டஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, தேசியக் கொடியினை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டியிலிருந்து கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் சமூக ஊடக கணக்குகளான முகநூல் ஆகியவைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

கோவையில் நாளை பார்களை மூட உத்தரவு

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி நேற்று கூறுகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) சுதந்திர தினத்தையொட்டி கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார். விதிகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News August 14, 2024

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா 

image

கோவை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், முனைவருமான வெ.கீதாலட்சுமி தேசியக் கொடியேற்றி, சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றி உள்ளார். இதுகுறித்து தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

கோவை ரயில்நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போத்தனூர் வழியாக இயங்கும். வருகின்ற 14ம் தேதி மற்றும் 21ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் என்று இன்று தெரிவித்தனர். 

News August 14, 2024

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

image

கோவை மணி உயர்நிலைப்பள்ளியில் 1974ம் ஆண்டு இறுதி ஆண்டு முடித்த மாணவர்களின் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களை, தற்போதைய சாரண இயக்க மாணவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, தங்கள் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவர்கள், தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். முன்னாள் மாணவர்கள், தங்கள் வகுப்பு வாரியாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

News August 13, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பொள்ளாச்சியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ➤வால்பாறை பகுதியில் இரவில் யானை உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ➤சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி 3 நாள்கள் நடைபெறுகிறது. வரும் 15ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி. ➤பாப்பம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து லாரி மீது மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் கயாம் அடைந்தனர்.

error: Content is protected !!