Coimbatore

News July 30, 2024

“பழமையான மரங்களை வெட்ட கூடாது”

image

கோவை, மதுக்கரை நகராட்சி பகுதியில் இருநூறு வருடங்களுக்கு மேல் பழமையான அரச மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் பசுமை இயக்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 50 முதல் 200 வருடங்களுக்கு மேல் பழமையான அரச மரங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வெட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

News July 29, 2024

முன்னாள் அமைச்சர் கலெக்டரிடம் மனு

image

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் இரு தினங்களில் யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.

News July 29, 2024

‘கொலை மாநிலமாக மாறிய தமிழகம்’

image

பொள்ளாச்சி எம்எல்ஏ வி.ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

News July 29, 2024

‘கொலை மாநிலமாக மாறிய தமிழகம்’

image

பொள்ளாச்சி எம்எல்ஏ வி.ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

News July 29, 2024

கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

image

மேட்டுப்பாளையத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் அவர் அளித்த கடிதத்தை இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் சென்னையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி வழங்கினார்.

News July 29, 2024

கோவையில் இடியுடன் மழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News July 29, 2024

பைக் மீது டேங்கர் லாரி மோதி 2 பேர் பலி

image

பொள்ளாச்சியில் நேற்று (ஜூலை 28) டேங்கர் லாரி மோதி இருவர் உயிரிழந்தனர். சுந்தேரகவுண்டனூரை சேர்ந்தவர் கவிபிரகாஷ் (20), ஜெயபிரகாஷ் (24). இவர்கள் நேற்று மாலை பணி முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மின்நகர் அருகே பின்னால் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 29, 2024

மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்கள்

image

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. மாணவர்கள் பிரிவில் வாலிபால் போட்டியில் என்ஜிஎன்ஜி பள்ளி முதலிடமும், மாணவியர் பிரிவில் கோ-கோ போட்டியில் கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளி முதலிடமும் பிடித்தன. சர்வதேச வாலிபால் வீரர் மதுசூதனன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

News July 29, 2024

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி

image

கிணத்துக்கடவு சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வந்ததால் உற்பத்தி அதிகரித்து விலை குறைந்துள்ளது. கடந்த வார மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.500க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது.

News July 28, 2024

திமுகவினருக்கு மட்டன் பிரியாணி

image

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெற்றார். அதனை தற்போது வரை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை தனியார் மண்டபத்தில் இன்று திமுகவினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என விருந்து தயாராகி வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் கௌரவிக்கப்பட உள்ளனர். 

error: Content is protected !!