India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சி சார்பில் நேற்று செய்தி குறிப்பை வெளியிட்டனர். இதில் இலவச கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச்.20 முதல் தொடங்குகிறது. இப்பயிற்சி ஒரு மாத காலம் நடைபெறும். தொழில்வாய்ப்பு திறன்களை வளர்க்கும் இப்பயிற்சியில் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் சேரலாம். மேலும், விருப்பமுள்ளவர்கள் 63858- 37858 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். (Share பண்ணுங்க)
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், மார்ச் 23ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி, செந்தில்நகரில் வசிப்பவர்கள் கமலக்கண்ணன்-மீனா தம்பதி. இவர்களது 2 வயது மகன் சிரஞ்சீவி விக்ரம், நேற்று இரவு முதல் காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இன்று காலை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, சிரஞ்சீவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் ஜனவரி 1 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை, கோவை மாநகரில் 200க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் நடைபெற்றுள்ளது என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 2.5 மாத காலத்தில் நடைபெற்ற 249 விபத்துக்களில், 55 விபத்துக்கள் மிகவும் ஆபத்தான விபத்துகளாக இருந்துள்ளது. இதனால் இப்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை தடாகம் சாலை, கோவில்மேடு அருகே, கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில், நேற்று (மார்ச்.17) ஆரஞ்சு நிறத்தில் தவளைகள் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் சிலர், அந்த தவளைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மார்ச்.23ஆம் தேதி கோவை வருகிறார். ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாநகராட்சி நிதியின் கீழ் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக அரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செய்து வருகிறது.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச்.22ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை மூலம் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனே வேலை வழங்கப்படும். (Share பண்ணுங்க).
கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று(மார்ச்.17) திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த இரு நாள்கள்( நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை இருக்கும் என TNAU காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். Share பண்ணுங்க
கோவை மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின், கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.