India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
கோவை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். கோவை மக்களே இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.
வெள்ளியிங்கிரி ஆண்டவர் கோயில் – பூண்டி. பட்டீஸ்வரர் கோயில் – பேரூர். மன்னீஸ்வரர் கோயில் – அன்னூர். வில்லீஸ்வரர் கோயில் – இடிகரை, நஞ்சுண்டேஸ்வரர் கோயில் – காரமடை. சங்கமேஸ்வரர் கோயில் – கோட்டைமேடு. அம்மணீஸ்வரர் கோயில் – மெட்டுவாவி. அழுக்குசாமி கோயில் – வேட்டைக்காரன்புதூர். நீலகண்டேஸ்வரர் கோயில் – ஒண்டிப்புதூர். பரமசிவன் கோயில் – இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
நாளை (மார்ச்.28) தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் 39,433 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
சூலூர் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு இயற்பியல், ஆங்கிலம், சமூக அறிவியல், கணக்கியல் ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<
கோவையில் அவ்வப்போது மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும். இந்நிலையில் வரும் மார்ச்.28 முதல் ஏப்ரல் 15 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால், நாளை மார்ச்.28ஆம் தேதி கோவையில் மின்தடை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Share பண்ணுங்க)
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் விடுமுறை கால சிறப்பு மலை ரயில் நாளை மறுதினம்(மார்.28) முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிப்பு, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, குற்றங்களை கண்டறிதல், தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி தாலுக்கா, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 : 2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கியூசிஐ விருதையும் பெற்றுள்ளன. இவற்றிற்காக டிஎஸ்பி, போலீசார் உள்ளிட்டோரை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
தொழிற்சாலை மற்றும் கட்டுமான தேவைகளுக்கு, கோவை மாநகராட்சி சார்பில், மும்முறை சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுபோன்று நீர் விநியோகம் செய்யும் சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் விவரங்களை cityengineer.coimbatore@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவோ, அல்லது 9944064948 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அனுப்பலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.