India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.
கோவை வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி, வினோபா தம்பதி. இவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மாக்கினம்பட்டியில் மைத்துனர் நடத்திய ஹோட்டலை கார்த்தி தனது மனைவியுடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.
அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அபுதாபி – கோவை – அபுதாபி விமான சேவை நேற்று முதல் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.
கோவை மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஏப்.1 மாலை 5 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே வரும் (ஏப்.4-6) வரை மலை மீது வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால் தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
கோவையைச் சேர்ந்தவர் நிர்மல் காளிநாத். இவர் வீட்டிற்கு சிலிண்டர் வாங்கியுள்ளார். சிலிண்டர் எடை குறைவாக இருந்தது. இதுகுறித்து காஸ் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்த போது பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்து, நிர்மல் காளிநாத்திற்கு இழப்பீடாக ரூ.20,000, வழக்கு செலவு ரூ.5,000 வழங்க உத்தரவிட்டது. உங்க வீட்டு சிலிண்டரை செக் பண்ணுங்க(SHARE பண்ணுங்க)
கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவை மாநகராட்சி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.
கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை, மற்றும் வீடு புகுந்து திருட்டு ஆகிய வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, கைது செய்ய 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படைகள் நேற்று கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உட்கோட்டங்களில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 73 நபர்களை, காவல்துறையினர் கைது செய்தனர் என்றார்.
கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோயில் – மேட்டுப்பாளையம். பொன்னூத்தம்மன் கோயில் – தடாகம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்காநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். ராமலிங்க செளவுடேஸ்வரி அம்மன் கோவில் – குமாரபாளையம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.