India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை ஆவின் நிறுவனம் 2 ஆண்டுகளாக பொது மேலாளர் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இந்த பிரச்சினைக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் ஊழியர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
பின்லாந்து நாட்டில் டர்கூ பல்கலை சார்பில் 32வது சர்வதேச மாநாடு(இன்று) ஜூலை.7 முதல் 10 வரை நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறந்த பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்படி கோவை பாரதியார் பல்கலை தாவரவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பெனடிக்ட் மேத்யூஸ் பால் மற்றும் கவுதம் கண்ணன் ஆகியோர் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வாகியுள்ளனர்.
2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 61 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<<16974303>>தொடர்ச்சி<<>>(1\2)
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
கோவை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0422-2449550 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
கோவை மாவட்டத்தில் சில இடங்களில் வாழைப்பழத்தில் ‘எத்தலின் ஸ்பிரே’ தெளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாழைப்பழத்தோல் ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் இருந்தால் இயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழமாகும். செயற்கை ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓரிடத்தில் மஞ்சளாகவும், சில இடங்களில் பச்சையாகவும் இருக்கும். இதை சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரிக்கை!SHAREit
வால்பாறையை சேர்ந்தவர் சீனிவாசன்(29). குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்த வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இவரிடம் விலகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலி பேச மறுத்த விரக்தியில் சீனிவாசன் நேற்று முந்தினம் இரவு தனது அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது நண்பர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அப்துல் ஜபார் இறந்து 6 நாள்கள் ஆனதை உறுதிசெய்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது, எலி இறந்து வாடை வருவதாக நினைத்தேன் என்றார். கணவன் இறந்தது கூட தெரியாமல், மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை காரமடை அருகே உள்ள, பெட்டதாபுரத்தில் புகழ்பெற்ற பெட்டதம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலை காண 2 கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். சக்திவாய்ந்த பெட்டதம்மனை தரிசித்தால், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். கவலையை மறந்து குடும்பத்துடன் ஒருநாள் கோயிலில் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பெட்டதம்மன் கோயில் ஒரு வரப்பிரசாதம். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.