India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கான்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்ப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் நேற்று (செப்.10) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று (செப்.10) வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையன் சமீபத்தில், “அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்” என்று பேசியிருந்தார். இதற்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று கோவை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
துடியலூர் அடுத்துள்ள தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில் தடாகம் அடுத்துள்ள சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் இன்று அதிகாலை கணேசன் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு தற்போது கோவை ஜிஎச்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் இன்று செய்யப்படவுள்ளதால் முன்னிட்டு, இன்று காலை 11முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் கோவையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம், கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் கூடுதல் மேம்பாட்டு கமிஷனர் இஷிதா கங்குலி திரிபாதி தலைமையில் நடந்தது.
கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று திமுக பவள விழாவையொட்டி, கோவை மாநகர், மாவட்ட திமுக எல்லைக்குட்பட்ட அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றி, மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும். அதன் புகைப்படங்களை வரும் செப்.14ம் தேதிக்குள் கோவை திமுக அலுவலகத்தில் அனுப்பி வைக்க அதில் கேட்டு கொண்டுள்ளார்.
கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் பிரிண்டிங், பேப்பர், பேக்கேஜிங், பல்வேறு மூலப்பொருட்களை மையமாக கொண்டு, ‘3பி’ மற்றும் ‘ரா-மேட்’ கண்காட்சி நேற்று துவங்கியது. இதில் பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங் இயந்திர உற்பத்தியாளர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர், டிசைனிங், லேசர், டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, அரங்குகள் அமைத்துள்ளனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட கல்வி அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு சென்னையில் இருந்து உத்தரவு வெளியாகி உள்ளது. கோவை மாவட்ட புதிய கல்வி அலுவலராக நீலகிரி மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த கோமதி நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.