Coimbatore

News August 20, 2024

BREAKING கோவை: முதல்வருடன் வானதி சந்திப்பு

image

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், தனது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், தொகுதியின் வளர்ச்சித் திட்ட கோரிக்கைகளை வைப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது.

News August 20, 2024

கோவை ஆட்சியருக்கு குவியும் வாழ்த்து

image

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த ஆட்சியர்  விருதினை 78வது சுதந்திர தின விழாவில் பெற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை திமுக பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

News August 20, 2024

கோவையில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

கோவை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கோவை தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 49 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

கோவையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு காரணமாக இன்று (ஆக.20) கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.

News August 20, 2024

கோவையில் 15,754 மாணவர்களுக்கு உக்கத்தொகை

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு உயர்கல்வி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்திலும் 242 கல்லூரிகளில், 15,754 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவி்த்துள்ளார்.

News August 19, 2024

கோவை இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤கோவையில் நாளை மேயர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
➤சிங்காநல்லூர் எம்.எல்.ஏ, ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் மோசடி செய்துள்ளதாக ஒரு குடும்பமே புகார்
➤வால்பாறையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை
➤கோவையில் ஆவணி அவிட்டம் கோலாகலம்
➤கோவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
➤பீளமேட்டில் பெண்களை வைத்து விபச்சாரம்- 7பேர் கைது
➤கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

News August 19, 2024

கோவை மேயர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை கோவை மாநகராட்சியின் மேயர் ரங்கநாயகி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி தீர்வு காணலாம் என்று கூறியுள்ளார்.

News August 19, 2024

அதிமுக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு

image

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரே குடும்ப வாரிசுதாரர்களான 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது, தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ, ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தனர்.

News August 19, 2024

JUSTIN: கோவை கலெக்டர் திறந்து வைப்பு

image

கோவை செம்பட்டி காலனியில் போஸ்க் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியுதவி ரூ.60 லட்சம் மதிப்பில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் கட்டடத்தின் இரண்டாம் தளத்தை இன்று மேயர் ரங்கநாயகி முன்னிலையில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த முதியோர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது, கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் இருந்தனர்.

News August 19, 2024

வால்பாறையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை

image

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை மான் காட்டெருமை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் அய்யர்பாடி பகுதியில் சாலையோரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!