India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் வீரதீர சாகசங்கள் புரிந்த 22 காவல்துறையினர் அண்ணா விருதுக்கு தேர்ச்சியடைந்துள்ளனர். ஆண்டு தோறும் தமிழக காவல்துறையில் திறம்பட பணியாற்றும் காவல்துறையினருக்கு அண்ணா விருது தமிழக முதல்வர் கைகளில் வழங்கபடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இன்று (ஆக.23) வழங்கப்பட உள்ளது . இதற்காக கோவை மாநகரில் 15 பேரும், புறநகர்ப் பகுதியில் 7 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நீதிபதியை சந்தித்த சனநாயக உரிமை அமைப்பை சார்ந்த வழக்கறிஞர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த மனுவில் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் சித்ரவதைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். மேலும் இதற்க்கு எதிராக 206 வழக்கறிஞர்கள் கையேழுத்து இட்டு அந்த மனுவை வழங்கினர்.
➤கோவையில் சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
➤வால்பாறை அருகே மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
➤சிங்காநல்லூர் நகர கூட்டுறவு கடன் சங்க புதிய கிளை திறப்பு
➤மேட்டுபாளையத்தில் மனைவி உட்பட்ட 3பேருக்கு கத்தி குத்து – கணவர் கைது
➤மேட்டுப்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு
➤காளப்பட்டி மாரியம்மன் கோவில் நன்னீராட்டுப் பெருவிழா
கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாதத்திற்கான உற்பத்தி குழு கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதனைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தின் 2வது தள கூட்ட அரங்கில் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் ஆக.22 முதல் செப்.17 வரை ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் பெங்களூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் ஆக.24 முதல் செப்.18 வரை வெள்ளி, திங்கள், புதனில் ரயில் இயக்கப்படும். ரயில் சேலம் போத்தனூர் ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் செப்டம்பா் முதல் வாரத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பான் காா்டு தேவைப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்காக கல்லூரி வளாகங்களில் சிறப்பு இ-சேவை மையங்கள், அக.22, 23ஆகிய நாள்களுக்கு நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வால்பாறை அருகே ஷேக்கல்முடி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் நேற்று தனது 4வயது மகன் முகிலனை, அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பலத்த காற்று வீசிய நிலையில், திடீரென்று சாலையோர மரம் சரிந்து விழுந்தது. இதில், தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் முகிலன் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 23ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில், 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 0422-2642388, 94990-55937 என்ற எண்ணை அழைக்கலாம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தனியார் பேருந்து கோவை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்ற போது குட்டையூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காரமடை போலீசார் தனியார் பேருந்து டிரைவர் , கண்டக்டர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
➤விரைவில் பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.
➤Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை- கோவை காவல் ஆணையர்
➤கோவை டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➤ஆழியாறில் திடீர் சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு
➤ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
Sorry, no posts matched your criteria.