Coimbatore

News August 25, 2024

கோவையில் வாடகை தாயாக 10 பேர் விண்ணப்பம்

image

கோவை மாவட்டத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் ஊர்க் நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

BREAKING பொள்ளாச்சி அருகே கவுன்சிலர் காலமானார்!

image

கோட்டூர் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் மல்லிகா சக்திவேல், இன்று காலமானார். அவரின் உடலுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, கோட்டூர் பேரூராட்சி செயலாளர் பால்ராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

News August 25, 2024

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு இடம் தேர்வு

image

கோவையை மையமாக கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, எஸ்பி பத்ரிநாராயணன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரது தலைமையில் ஒரு துணை சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர் உட்பட, 40 போலீசார் பணியாற்றி வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அதிகாரியின் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள காலி நிலத்தில், சில ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு இடம் தேர்வு

image

கோவையை மையமாக கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, எஸ்பி பத்ரிநாராயணன் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரது தலைமையில் ஒரு துணை சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர் உட்பட, 40 போலீசார் பணியாற்றி வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அதிகாரியின் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள காலி நிலத்தில், சில ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

கோவையில் வரி வசூலிக்க புது டெக்னிக்

image

கோவை மாநகராட்சியில் டிரோன்கோ மூலமாக வார்டு வாரியாக அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டு, சொத்து வரி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஏராளமான ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டு புது கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், சொத்து வரியை மாற்றியமைக்கவில்லை. முதல்கட்டமாக ரூ.100 சொத்து வரி செலுத்தும் வரி விதிப்புதாரர்கள் கட்டடம் எவை என பில் கலெக்டர்கள் மூலம் கள ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News August 25, 2024

கோவை பி.எப். அலுவலகத்தில் தமிழில் யூடியூப் சேனல்

image

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பற்றிய தகவல்களை, உறுப்பினர்கள் தமிழ் மொழியில் அறிந்து கொள்ளும் வகையில், கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், தமிழில் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. பி.எப். அலுவலகம் வழங்கும் சேவைகள் பற்றி @epfozocbe என்ற எக்ஸ் தளம், @epfozocoimbatore என்றமுகநுால், ஆகிய தளங்களில் சந்தாதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

News August 25, 2024

பார் விற்பனையாளரை மிரட்டி பணம் பறிப்பு 

image

கோவில்பாளையம் அருகே பார் விற்பனையாளரை மிரட்டி பணம் பறித்த 3 பேரை (ஆகஸ்ட். 24) போலீசார் கைது செய்தனர். கைக்கோளபாளையம் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ரவி என்பவரை மிரட்டி ரூ.1200/- பணம் பறித்த கோவில்பாளையம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தனுஷ்(20), ராம்கிருபா (19), மகேஸ்வரன்(20) ஆகியோரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

News August 25, 2024

நூதனமான முறையில் விழிப்புணர்வு

image

கோவை மாவட்டம் பந்தயசாலை பகுதியில் இன்று, அனைத்து மிருக வகைகளை கொலை செய்ய கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, விலங்குகள் கூண்டுக்குள் அமர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அனைவரும் கண்டு ரசித்த படி சென்றனர்.

News August 24, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க மிஸ்டு கால் கொடுத்து சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம் என கோவை விமான நிலையத்தில் தமிழிசை பேட்டியளித்தார். ➤கோவையில் இருந்து இன்று, நாளை, நாளைமறுநாள் ஆகிய 3 நாள்களுக்கு கோவையில் இருந்து வெளியூருக்கு சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ➤கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீ என தெரியவந்தது.

News August 24, 2024

கோவையில் இருந்து 40 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் இருந்து சேலம், தேனி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மக்கள் நெரிசல் இன்றி செல்ல பின்னர் திரும்பி வர உதவிடும் நோக்கில் கோவையில் இருந்து 40 கூடுதல் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!