India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் 25 வரை கோவை மாநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாக 126 பைக் ஓட்டுநர்கள், 18 உயர் ரக கார் ஓட்டுநர்கள், 52 கார் ஓட்டுநர்கள் என மொத்தமாக 178 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜாவில் இருந்து
கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமானத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கடத்தி வந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை துணி வியாபாரி சங்கம் (சிசிஎம்ஏ) சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் ஏற்கனவே தலைவராக இருந்த ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கமல் பாஷா துணை தலைவராகவும், முரளி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மின்பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஆக.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, லாலி ரோடு, டி.பி.ரோடு ஒரு பகுதி, கவுலிபிரவுன் ரோடு, ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒரு பகுதி, பெரிய தடாகம், சின்னத்தடாகம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், எளிதாக தமிழில் பேச வேண்டும். அவர்களுக்குள் சரியான புரிதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான், அவர்கள் செய்யும் பணி எளிமையாகும். தகவல் தொடர்பு சுலபமாகும். உற்பத்தியில் பாதிப்பு வராது. இப்பயிற்சி, விரைவில் அந்தந்த தொழிற்சாலை வளாகங்களிலேயே, பணி நேரம் அல்லாத நேரத்தில் இணைய வழியில் நடைபெறும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல வைப்புநிதி கமிஷனர் வைபவ் சிங் இன்று விடுத்த அறிக்கையில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி பிஎப் சந்தாதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கோவையில் ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரியிலும், நீலகிரி எல்லனகள்ளி நீடில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும், திருப்பூர் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள ஜியூஎஸ் ஆடை நிறுவனத்திலும் நடைபெற உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூலூர் விமானப்படை தளத்தில் சரக்கு கையாளும் பணிக்கு 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ள ஆண்களுக்கு மாதம் ரூ.15000/- சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 9443301432 என்ற எண்ணில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி “கோவையில் 1542 ரேஷன் கடைகள் இருப்பதாகவும், 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயன் பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், இன்று 750 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று 1500 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மேயர் ரங்கநாயகி ஆகியோர் இருந்தனர்.
அதிமுக மாநில விவசாய அணி துணைத்தலைவர் (ஆகஸ்ட். 25) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் டியூகாஸ் கூட்டுறவு நிறுவன தலைவரும், அதிமுக மாநில விவசாய அணி துணை தலைவருமான சுப்பையன் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.