India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட ரயில்வே போலிசார் இன்று கூறியதாவது: கோவை ரயில் நிலையத்திற்கும் போத்தனூர் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள வாலாங்குளம் மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ஒருவர் அந்த வழியாக வந்த ரயிலில், அடிபட்டு இறந்துள்ளார். இறந்தவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து இரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயில் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையில் காரில் செல்ல அனுமதி. காலை 7 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாலை வழியாக மலைக்கு நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்கள், பணிசெய்ய உள்ளனர். இதற்க்கு 48 மேற்பார்வையாளர்கள் நியமிக்கபட்டு, அவர்களுக்கு இப்பணி தொடர்பாக பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது என தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை செப்.28ஆம் தேதி நடத்துகிறது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள் படித்தவர்கள் கல்வி மற்றும் அடையாள சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கோவைச் சேர்ந்தவர்களே உடனே share பன்னுங்க
ஆண்டு தோறும் கைவினை கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவாகும் பருத்தி ஆடைகளை, விற்பனை செய்யும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கபடும். இந்நிலையில் இன்று கோவை வஉசி பூங்கா பகுதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்திலு புதிய ஆடைகளை தள்ளுபடி சலுகைகளை இன்று ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று துவக்கி வைத்தார்.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், தமிழக – கேரள எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவ்வகையில் கேரள எல்லையில் உள்ள காரமடை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களில் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
சிறுமுகை காவல் நிலைய பகுதியில் 840 கிலோ புகையிலை பொருட்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷபிக் அகமது என்பவரை தேடி வருகின்றனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட எஸ்ஐ-க்கள் ரவிச்சந்திரன், ஆனந்தகுமார், தனிப்பிரிவு காவலர்கள் ராஜேஷ், சிவராஜ் உள்ளிட்டோரை நேற்று நேரில் வரவழைத்த கோவை எஸ்.பி கார்த்திகேயன் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
கோவையில் அக்டோபர் 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஜென்னிஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களும், புதிய முயற்சிகளுடனும் நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளோம். அது ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என்றார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது: தெலுங்கானா பகுதியில் உள்ள வாரங்கல், காசிபேட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கோவையில் இருந்து புறப்படும் வாராந்தர ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக தன்பாத் சென்றடையும். இந்த ரயில் நாளை மற்றும் 02.10.24 அன்று தன்பாத்தில் இருந்து கோவை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
கரடிமடையில் கிராவல் மண் கொள்ளை நடப்பாதக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வின் போது யானையின் எலும்பு துண்டுகள் சிதறி கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து யானை தந்தத்திற்க்காக வேட்டையாடப்பட்டதா? யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்று வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.