Coimbatore

News September 16, 2024

பரம்பிக்குளம் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு

image

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பரம்பிக்குளம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 1482 கன அடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உபரி நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 16, 2024

செப்.26: கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

image

கோவை கோட்ட அளவிலான தபால் குறைதீர் கூட்டம், செப்டம்பர் 26ம் தேதி காலை 11 மணிக்கு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம் (கோவை தலைமை அஞ்சலகம் 2வது மாடி) கூட்ஷெட் ரோடு அலுவலகத்தில் நடக்கிறது. பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தேதியில் உரிய நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ க்ரீம் பன்னுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிப்பதாக அன்னபூர்ணா உரிமையாளர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அங்கு க்ரீம் பன் வாங்கிய நபருக்கு 5% என பில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ➤சின்னியம்பாளையத்தில் இளம்பெண் கொலையில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ➤அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்டதை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சதீஸ் கேள்வி.

News September 15, 2024

விஜயபிரபாகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

image

கோவை பேரூர் பகுதியில் இன்று தே.மு.தி.க நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வந்த மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், தே.மு.தி.க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து, அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம் என்றார்

News September 15, 2024

வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

image

ஜிஎஸ்டி குறித்த விவாதத்தில் தொழிலதிபர் ஸ்ரீனிவாசனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்த வீடியோ வைரல் ஆன நிலையில், கோவை பாஜக நிர்வாகி சதீஷ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து சதீஷ் கூறுகையில், வீடியோ பார்வேர்டு செய்ததற்காக நீக்கப்பட்டிருக்கிறேன். வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றார்.

News September 15, 2024

கோவை: வானதி முதல்வருக்கு எதிராக கொந்தளிப்பு

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் மன்னிக்காது என்றார்

News September 15, 2024

கோவை அன்னபூர்ணா விவகாரம்: புதிய சர்ச்சை!

image

கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் க்ரீம் பன்னுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிப்பதாக அன்னபூர்ணா உரிமையாளர் குற்றம் சாட்டியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் நேற்று கோவை கணபதி பகுதியில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் க்ரீம் பன் வாங்கிய நபர் ஒருவருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என பில் போடபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News September 14, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக பணியாற்றி வந்த சதிஷ் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம். ➤ஜிஎஸ்டி குறித்து பேசியது தொடர்பாக விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ➤தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ➤திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News September 14, 2024

கழுத்தில் BUN-னுடன் ஆர்ப்பாட்டம்

image

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, அன்னபூர்ணா உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கதக்கது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் தனது கழுத்தில் BUN-னுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 14, 2024

தாமதமாக வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு

image

கோவை மாவட்டத்தில் இன்று குருப்-2 தேர்வு நடைபெறுகின்றது. இந்த தேர்வை எழுத தேர்வு அறைக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இன்று தேர்வு நேரம் முடிந்து கடைசி நேரத்தில் தேர்வு எழுத வந்த மாணவியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, உங்களை உள்ளே அனுப்பினால் எனது வேலை போய்விடும் என கையெடுத்து கும்பிட்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

error: Content is protected !!