India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது மார்ச் 30ம் தேதி இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
சேலம் – கொச்சின் சாலை ஒட்டியுள்ள மரப்பாலத்தில் அமைந்துள்ள, ரயில்வே கீழ் பாலத்தை, திரும்பக்கட்டும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து, இடது புறம் திரும்பி, கற்பகம் காலேஜ் சந்திப்பில் செல்ல வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளனர்.
கோவையில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், மாலை 6 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 25ஆம் தேதி கோவை வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிப்பு செய்கிறார். இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியின் 25-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி வியாழன் காலை 10:30க்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விக்டோரியா காலில் மாமன்ற நிதி குழு தலைவர் மு.பா.சீரா பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மறுநாள் நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
கோவை மதுக்கரை அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா(53). சில தினங்களுக்கு முன் இவர் அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கலெக்டர் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கில் (மார்ச்.30) அன்று நடைபெற உள்ளது. இதில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். இதற்கு <
கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.