Coimbatore

News March 24, 2025

2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

image

கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் நடைபெற்ற வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாமில் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. கடந்த மார்ச்.17ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 6 முதல் 12 மாதம் உள்ள 36,715 குழந்தைகளுக்கும், 1 முதல் 3 வயது வரை உள்ள 89,994 குழந்தைகள் என மொத்தம் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2025

கோவையில் வேலை வாய்ப்பு! இன்று கடைசி நாள்

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

“2026ல் தமிழகத்தை ஆளப்போகிறோம்”

image

வரும் மார்.28ல் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை பாபு சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘ பொதுக்குழுவில் கூட போறோம் – 2026இல் தமிழகத்தை ஆளப்போகிறோம்’ ‘ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டுள்ளன.

News March 24, 2025

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

image

வெள்ளியங்காடு அடுத்துள்ள பில்லூர் அணை மாட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு  மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

image

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News March 24, 2025

கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

image

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News March 24, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச்28, ஏப்.4- வெள்ளியன்று புறப்பட்டு சிறப்பு ரயில் ஞாயிறன்று ஷாலிமார் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கத்தில் மாா்.31, ஏப்.7 திங்களன்று ஷாலிமாரில் புறப்பட்டு புதனன்று திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 23, 2025

JOB: சூலூர் விமானப்படை பள்ளியில் வேலை

image

சூலூர் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு இயற்பியல், ஆங்கிலம், சமூக அறிவியல், கணக்கியல் ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.2ஆகும். (Share பண்ணுங்க)

News March 22, 2025

துணை முதல்வர் கோவை பயணம் ஒத்திவைப்பு

image

கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!