Coimbatore

News April 5, 2025

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

கோவை கலெக்டர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோயம்புத்தூர் 2024-25-ம் ஆண்டிற்கு சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், நகர்ப்புறங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகள் மணிமேகலை விருதுபெற 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News April 5, 2025

கோவையில் வீடு கட்ட போறீங்களா..!

image

கோவையில் ஊராட்சி பகுதிகளில் 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார். பதிவு செய்ய பட்டா, வீட்டு மனைப்பிரிவு ஆவணம், தளபுகைப் படங்களை இணைத்து பயன் அடையலாம். வீடு கட்டுபவர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 5, 2025

முதல்வரின் பயண விபரம் வெளியீடு 

image

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.5) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11.10 மணிக்கு கோவை வருகிறார். அங்கிருந்து 11:30 மணியளவில் மேட்டுப்பாளையம் புறப்படுகிறார். 12 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் அவருக்கு திமுகவினர் வரவேற்பும், தொடர்ந்து தனியார் ஹோட்டலுக்கு 12.15 மணியளவில் செல்கிறார். பின், அங்கிருந்து 4:30 மணிக்கு ஊட்டி செல்ல உள்ளார்.

News April 4, 2025

கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 3, 2025

மருதமலையில் இப்படி ஒரு ரகசியமா? 

image

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். Share பண்ணுங்க.

News April 3, 2025

மருதமலையில் கும்பாபிஷேகம்: 1000 போலீசார் பாதுகாப்பு

image

பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News April 3, 2025

கோவையில் நூதன மோசடி 

image

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கார்த்திக்கின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் வந்துள்ளது. அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட கார்த்திக் ரூ.9.20 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். லாபமும் வரவில்லை. அசலும் வரவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 3, 2025

BREAKING: மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு

image

கோவை மாவட்த்தில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் சாமியார் வேடத்தில் வந்த நபர் வேலை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நாளை(ஏப்.3) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை ஒட்டி பலத்த பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

News April 3, 2025

சக்தி கலசங்களை வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அழைப்பு

image

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (04-04-2025) நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று (03-04-2025) திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் உள்ள சக்தி கலசங்களை, யாகசாலையில் வைத்து பூஜை செய்ய இருப்பதால், பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை, இன்று மாலை வரை தரிசனம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.

News April 3, 2025

கோவையில் போக்குவரத்து மாற்றம்

image

கோவை மருதமலைகோவில் திருக்குட விழா நாளை (ஏப்.4) தேதி நடைபெற இருப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதில் மருதமலை வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக, மகாராணி அவென்யூ, மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி, பாரதியார் பல்கலைக் கழகம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!