Coimbatore

News August 6, 2025

கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

image

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <>‘உழவர்’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

image

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.

News August 5, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

கோவை: கடன் தொல்லை நீக்கும் கால சம்ஹார பைரவர்!

image

கோவை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கோவை: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

News August 5, 2025

கோவையில் நூதன முறையில் மோசடி!

image

கோவை சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் காயத்ரி (29). இவரிடம் 50 வயது பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார். நேற்று இந்த பெண் காயத்ரியிடம் 9cm நீளம் 6cm அகலத்தில் ஒரு கட்டியை தங்க கட்டி என தந்து, அதை விற்று தரும்படி கூறி 3½ பவுன் தங்கச் செயினை வாங்கிச் ஏமாற்றி சென்றார். பின் காயத்ரியன் கணவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

News August 5, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கோவை: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <>https://startuptn.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கோவையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

கோவை, வேளாண் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்ப்பில், தேனி வளர்க்க நாளை ஒருநாள் (ஆக.6) பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தேனி இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 4, 2025

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

image

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!