India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மண்டல அமலாக்க துறை அதிகாரிகள், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நடத்தும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சரின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.6) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவையில் காரமடையை அடுத்து பில்லூர் அணையை ஒட்டியுள்ள கிராமம் பரளிக்காடு. இங்கு வனத்துறையால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு அடர்ந்த காட்டுக்குள், பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து, ஆற்றுக் குளியலை குடும்பத்துடன் அனுபவிக்க முடியும். இணைய வழியாக மட்டுமே இதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.
கோவை மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி சரியாக படிக்கவில்லை என கூறி டி.சி பெற்றுக்கொள்கிறோம் என முத்திரைதாளில் எழுதி வாங்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மிரட்டி படிக்கவைக்க இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இது மாணவியின் மனநிலையை பாதிக்கும் என பெற்றோர்கள் அச்சம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் உள்ளது. அழகிய மலையிடுக்குகளின் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் குகைக்கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று ஊட்டி செல்கிறார். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் சற்று முன் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் ரிசார்ட்டில் தங்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.