Coimbatore

News April 8, 2025

கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

image

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News April 8, 2025

மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம், சில நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

News April 8, 2025

BREAKING: இரு தரப்பினர் மோதல்! வாலிபர் குத்திக்கொலை

image

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து நடந்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 8, 2025

ஒரு மாத இலவச பயிற்சி

image

கோவையில் கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி வரும் 9ஆம் தேதி முதல் 30 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், தையல், ஆரி ஒர்க், போட்டோ, வீடியோ கிராபிக், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் தேநீர், மதிய உணவு, சீருடை வழங்கப்படும். தொடர்புக்கு 94890-43926 அழைக்கவும். (நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.)

News April 8, 2025

மத போதகர் மீது போக்சாவில் வழக்கு பதிவு 

image

கோவையில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோரிடம் புகார் அளித்த நிலையில், கோவை மத்திய போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். 

News April 8, 2025

அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)

News April 7, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்ரல்.7) அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

எம்எல்ஏ அம்மன் கி.அர்ஜுனன் சஸ்பெண்ட்!

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கி.அர்ஜுனனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..

News April 7, 2025

முதல்வருக்கு இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மேட்டுப்பாளையம் பகுதியில் திரளான திமுகவினர் வரவேற்பு அளித்திருந்தார்கள். அதில் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டினர் திமுக தொண்டர்களுடன் இணைந்து தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் சார்பில் அச்சிடப்பட்ட பனியன் அணிந்து வரவேற்றார்கள்.

error: Content is protected !!