India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று பல்வேறுப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. ஏப்ரல்15-ஆம் தேதி பயிற்சி தொடங்குகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 15 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 16முதல் www.tncuicm.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மே.6 வரை மட்டுமே பரிசீலிக்கப்படும் என வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், கல்லாறு – பர்லியார் இடையே அடர்ந்த வனப்பகுதிக்குள், மலையேற்றம் மேற்கொள்ளும் திட்டம், கடந்த ஆண்டு வனத்துறையால் தொடங்கப்பட்டது. பின்னர், கோடை வெயிலால், சமீபத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி மீண்டும் மலையேற்றம் தொடங்கவுள்ளதாம். வார இறுதி நாட்களில் நடைபெறும் மலையேற்றத்திற்கு, விருப்பம் உள்ளவர்கள்,<
தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிள் அறிவித்துள்ளனர். வார இறுதி நாட்களை முன்னிட்டு1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
பிஎம் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச்.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஏப்.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10, 12, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ முடித்த இளைஞர்கள் பயன்பெறலாம். இதில் தேர்வாவோருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் (அ) 9566531310 எண்ணை அழைக்கலாம்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகையை முன்னிட்டு சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் 10 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு சூலூரில் இருந்து வெலிங்டன் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மருதமலைகோவிலுக்கு நாளை(ஏப்.10) முதல் 14ஆம் தேதி வரை பக்தர்கள் வாகனங்களில் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை முதல் பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். இதனால், மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் வாயிலாகவும், மலைப்படி வழியாகவும் வரலாம். (SHARE பண்ணுங்க)
கோவை மாவட்டத்தில் இன்று (08.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகங்களை தெரிந்துகொள்ள மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் 89259-75980. 89259-75981, 89259-75982. 90430-66114, 89258-40945 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில்> மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.