India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள RBI சுரங்கப்பாதை வரையிலான சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் கார்னர் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை & அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், 9.100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இச்சுகந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் முகத்தில் இந்திய மூவர்ணக் கொடி வடிவங்களும், தேசியச் சின்னங்களும் தீட்டிக் கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் தொடர் விடுறை வருவதால் சென்னையில் வசிக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சென்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.
3 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதே ரயில் வரும் 17-ம் தேதி இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்து தாம்பரம் வரை இயங்கும். (SHARE)
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நடைபெறும். பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- சேலம், சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சொந்த ஊர் செல்லும் மக்கள் கவலை அடைந்தள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், வரும் 16, 18ம் தேதிகளில் மேம்பாட்டு பணி நடப்பதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:40, பகல் 12:40, சென்ட்ரல்- சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05 என மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.