Chennai

News April 23, 2025

காதலை கைகூட வைக்கும் கபாலீஸ்வரர்

image

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் முக்கியமான திருமணத்தலமாகும். இங்கு கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் ஒன்றாக வழிபட்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கினால் காதலும், திருமணமும் கைகூடும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் காதல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய பூங்காக்கள்

image

▶️ விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா – அண்ணா நகர்
▶️ செம்மொழி பூங்கா, தேனாம்பேட்டை
▶️ பனகல் பூங்கா, தி.நகர்
▶️ கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோபாலபுரம்
▶️ திரு.வி.க பூங்கா, ஷெனாய் நகர்
▶️Eco பூங்கா, சேத்துப்பட்டு
▶️ நடேசன் பூங்கா, தி.நகர்
▶️ Eco பூங்கா, அடையார்

உங்கள் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களை இந்த பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

News April 23, 2025

இலவச கோடைகால வாலிபால் பயிற்சி

image

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

கோடைகால இலவச பயிற்சி: கலெக்டர்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம், வரும் வரும் ஏப்.25ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முற்றிலும் இலவசமாக நடைப்பெறும் இப்பயிற்சி முகாமில், 18 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

News April 23, 2025

அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்

image

புளியந்தோப்பைச் சேர்ந்த பாலு, குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) குடித்துவிட்டு ரகளை செய்ததோடு, மனைவி வள்ளி மற்றும் மருமகள் அஞ்சலையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தையை ஹெல்மட்டால் அடித்து, பிறகு கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆனால், தந்தையே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

News April 23, 2025

விமான நிலையத்தில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்னை விமான நிலையத்தில், ஏ.டி.சி. எனப்படும் விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கு, காலியாக உள்ள ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதிதான் கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (22.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*.

News April 22, 2025

கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை – தெற்கு ரயில்வே

image

சென்னையில் கடந்த 19ஆம் தேதி புறநகர் ஏசி ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்.22) இந்த ரயில் சேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கவும், கட்டணத்தை குறைக்கவும் பயணிகள் வலியுறுத்தினர். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம், ‘புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!