India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் மைதீஸ்வரன், அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு, கால்களில் உணர்ச்சியின்மை ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தான். பரிசோதனையில் ‘கிலன் பா சின்ட்ரோம்’ எனும் GBS நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <
எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி இன்று (பிப்.5) YMCA மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை வழி வருபவர்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2ஆவது தெரு வழியாக வரலாம். சைதாப்பேட்டை வழி வருபவர்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் யு-டர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக வரலாம்.
சென்னையில் இன்று (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, SBI காலனி, சாந்தி காலனி, வியாசர்பாடி, MKB, கிழக்கு முகப்பேர், நொளம்பூர், கோவூர், போரூர், லட்சுமி நகர், 40 அடி ரோடு, பி.டி.ராஜன் சாலை, KK நகர், அசோக் நகர், காமராஜர் சாலை, குன்றத்தூர், இரும்புலியூர், திருவெள்ளவாயல், காட்டுப்பாக்கம், வடபழனி, SSB நகர், நடேசன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை சாலையில் மின்தடை ஏற்படும்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் சென்னை வந்த பெண் பயணி, ஓட்டுநரால் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருக்கும்போது பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சேகரை(38) காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் உள்ள எம்.எம். காலனியை மெட்ரோ பணிக்காக காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.எம்.காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு உரிய நிவாரணம் வழங்கி மே.31ஆம் தேதிக்குள் அவர்கள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது வட மாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் கடத்தும்போது சிறுமி அலறல் கேட்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். அப்போது, போலீசார் பின்தொடர்வதை அறிந்து கோயம்பேட்டில் அந்த சிறுமியை கடத்தியவர்கள் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் நேற்றைவிட இன்று அதிகாலை முதலே அனைத்து இடங்களிலும் கடுமையான பனிமூட்டம் நிலவிவருகிறது. அதிக பனிமூட்டம் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. பனிமூட்டம் குறைந்த பிறகு எப்போதும் போல சரியான நேரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.