India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, ஆக.28 முதல் செப்டம்பர் 12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06037 எழும்பூர்–வேளாங்கண்ணி ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளிலும், 06038 வேளாங்கண்ணி–தாம்பரம் ரயில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை மாநகராட்சி, முதற்கட்டமாக மண்டலங்கள் 2, 3,4-ல்,355 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளது. இந்த திட்டம் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதிகாரிகள் கூற்றுப்படி, இது தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனிதர்களுக்கு வெறிநாய் காய்ச்சல் பரவுவதையும் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (19.08.2025) 12 இடங்களில் நடைபெறுகிறது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களை சேர்ந்த வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுத் தளங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.18) அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெறும் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.
சென்னை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)
▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.