India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், ரசாயன சாயங்கள், பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை அரசால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 21.76 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு–ஆவடி–பட்டாபிராம் பாதைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் மற்றும் உபயோக வசதிகள் மாற்றுதல் செலவுக்காக ₹2,442 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த புதிய வழித்தடம், கோயம்பேட்டிலிருந்து ஆவடி பட்டாபிராம் பகுதிகளை நேரடியாக மெட்ரோ இணைப்பதன் மூலம் போக்குவரத்து எளிமையாகும்.
சென்னை குமரன் நகர் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கடிதத்தில் கருணாகரன்(55) என்பவர் உயிரிழந்தார். அவரை அந்த நாய் தொடை, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளர் பூங்கொடியும் காயமடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தடை செய்யப்பட்ட நாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (ஆக.19) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5வது மாடியில் மிக்ஸியால் மின் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ 6 வது மாடிக்கும் மளமளவென பரவியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
சென்னையில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், சென்னை மாநகராட்சி மக்களுக்கு 1 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். <<17451623>>விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. ஷேர் பண்ணுங்க.
இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
சென்னை பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஹேல் அகமது (15) என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 18) மழை பெய்தது. இன்று செவ்வாய்கிழமையும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.