Chennai

News April 27, 2025

13 இடங்களில் ஸ்பா மூலம் பாலியல் தொழில்

image

அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேனேஜர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் ஹேமா ஜுலியோ (50) தலைமறைவாகிவிட்டர். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மயிலாப்பூரில் கைது செய்யப்பட்டார். இவருக்கு சென்னை முழுவதும் 13+ ஸ்பா சென்டர்கள் உள்ளன. அதில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

News April 27, 2025

சென்னையில் விமானத்தின் டயர் வெடிப்பு

image

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுதளத்திலேயே வெடித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, விமானத்தின் டயர் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, பழுதடைந்த டயர் மாற்றப்பட்டு, இரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு சம்பவம் சென்னையில் பரபரப்பை உருவாக்கியது.

News April 26, 2025

சென்னை “Knights on Night Rounds” விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (26.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

News April 26, 2025

சென்னையின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள்

image

சென்னைக்கு நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. தற்போது இருக்கும் கூட்டம் நிறைந்த சென்னை கடந்த 40 ஆண்டுகளில் உருவானது. உங்களுக்காகவே பழைய சென்னையின் மௌன்ட் ரோடு, ஜார்ஜ் கோட்டை, மெரினா பீச், அடையாறு, பாரிஸ் கார்னர், ரிப்பன் பில்டிங், மயிலாப்பூர் தேரோட்டம், சென்ரல் ஸ்டேசன், தாமஸ் மௌன்ட் ஆகியவற்றின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் பன்னி பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்

News April 26, 2025

பெண்கள் உதவி மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

வடசென்னையில் உள்ள பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாப்பாளர் (ரூ.12,000) மற்றும் பன்முக உதவியலாளர் (ரூ.10,000) பணியிடங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வரும் மே 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 26, 2025

சென்னை விமான நிலையத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து வரும் மே 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 26, 2025

சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

image

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News April 26, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (25.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

News April 26, 2025

பிரபல மூன்று ரவுடிகளுக்கு சென்னைக்குள் வர தடை

image

ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராக்கெட் ராஜா, நெற்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய மூன்று ரவுடிகளும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு வர சென்னை காவல் ஆணையரகம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து ஏனைய பிற காரணங்களுக்காகவும் சென்னை எல்லைக்குள் மேற்கண்ட 3 ரவுடிகளும் வருவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.

error: Content is protected !!