India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.
சென்னை குடிநீர் வாரியத்துக்கு, நிகழாண்டின் 2ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்த ஏதுவாக, வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் 3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மார்ச் 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் நேற்று வரை அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் வேட்பு மனு செய்வோரின் எண்ணிக்கை 70ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மார்ச் 16 முதல் இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் மொத்தமாக ரூ.59.13 லட்சம் ரொக்கமும், ரூ.5.26 கோடி மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17வது ஐபிஎல் தொடரில், சென்னை – குஜராத் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை காண சென்னை மாநகர பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை காண்பித்து ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம். மேலும், போட்டி முடிந்து வீடு திரும்ப ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் இன்று நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் மண்டலம் ஐந்து அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து திமுக கட்சி சார்பாக வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ஆர் டி சேகர், எம் எல் ஏக்கள் தாயகம் கவி ஐட்ரீம் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் மண்டலம் ஐந்து அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னையில் நிற்கும் டாக்டர் அமுதா வாணி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் கோகுல் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி. செல்வம் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.