India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டின் முன்னாள் மின்துறை அமைச்சரும், தற்போதைய திமுக வடசென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளர் கலாநிதி வீரசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி தனது ஓட்டு பதிவை தபால் வாக்கு மூலமாக செலுத்தினார்.தேர்தல் அதிகாரிகள் ஆற்காடு வீராசாமியிடம் அவருடைய வாக்கை சேகரித்தனர்.இதனை வடசென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராய நகா், காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று(ஏப்.8) பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 144 தடை சட்டத்தின் கீழ் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு.
சென்னையில், பிரதமர் பங்கேற்கும் ‘ரோடு ஷோ’ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் நிறைந்த பரபரப்பான இடமாகும். எனவே தியாகராய நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னையில் நாளை 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதில் தற்காலிகமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதை சரிசெய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மெட்ரோ நிலையங்களின் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்.8) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து உள்ளதாக பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டுள்ளது. நாளை முதல் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் இருந்து பெல்சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் வரும் 9, 10ம் தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர், சேப்பாக்கம், எழும்பூர், பெசன்ட் நகர் பகுதியில் இன்று காலை முதலே பறக்கும் படை சோதனை நடைபெறுகிறது. நேற்று இரவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர் விடுத்துள்ளார். தகவல் அறிந்த கல்லூரி இயக்குனர் போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலிசார் விரைந்து கல்லூரியில் சோதனை செய்து வருகின்றனர். ஏ.சி.எஸ் கல்லூரியில் மருத்துவமனை உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் நபரை போலிசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024.
Sorry, no posts matched your criteria.