India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அல்லது ஒயிட் ஹவுஸ் என்பது சென்னையில் 1639 இல் நிறுவப்பட்ட கோட்டையாகும். மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை தான் மெட்ராஸ் நகரத்தை உருவாக்க காரணமானது. பல ஆட்சியாளர்களிடம் இருந்த இக்கோட்டை, தற்போது தமிழ்நாடு மாநில சட்டமன்றத்திற்கான நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. இந்திய ராணுவத்தின் நிர்வாக ஆதரவுடன் இந்திய தொல்லியல் துறையால் இக்கோட்டை பராமரிக்கப்படுகிறது.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று முன்தினம்(மே 5) இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறின. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அந்த நாய்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அவற்றை அதன் உரிமையாளர் மதுரைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
சென்னையில், இன்று(மே 7) அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் தாக்கப்படுவதாக கூறி அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
சென்னையில், வாட்டும் வெயிலிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று(மே 6) செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வாகன ஓட்டிகளுக்காக சிக்னலில் நிழல் பந்தல் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி உள்ளிட்ட 10 பகுதிகளில் அடுத்த 3 நாளில் நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பாடவாரியாக பெற்ற 100 சதவீத மதிப்பெண் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வணிகவியலில் 16 பேர், கணினி பயன்பாடுகளில் 14 பேர், பொருளாதாரத்தில் 12 பேர், கணினி அறிவியலில் 9 பேர், கணக்கியலில் 2 பேர், புவியியல், கணிதம், விலங்கியல் ஆகியவற்றில் தலா ஒரு நபரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், காமெடி நடிகர் கிங்காங் மகளும் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர் பெற்ற மதிப்பெண் விபரங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, கிங்காங் மகள் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.