India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செயிண்ட் சார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது புனித மேரி தேவாலயம். இது இந்தியாவின் பழைமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த தேவாலயம் பிரபலமாக ‘கிழக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கட்டபட்ட இந்த தேவாலயம், 1680 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ரெவ். ரிச்சர்ட் போர்ட்மேன் என்பவரால் தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டது. கட்டிடத்தின் உள் பரிமாணங்கள் 86 அடி மற்றும் 56 அடி ஆகும்.
மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: அமைந்தகரை அய்யாவு காலணியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த நவ்ஷாத் என்பவர் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை உலகின் மிக ஆழமான சரக்கு கப்பல்களுள் ஒன்றான, ‘ஏபிஎல் பாஸ்டன்’ சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வந்தது. இந்த கப்பல் 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும், 14.9 மீட்டர் ஆழமும் கொண்டது. மேலும் இக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கப்பலை கையாண்டதன் மூலம், சென்னை துறைமுகம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.
மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நீலவழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ஆயிரம் விளக்கு உட்பட பல பகுதிகளில் நீர் நிரப்ப படாததால் அவை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களை பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சியும் பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் ஜூன் 6 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என செல்வம் X தளத்தில் பதிவிட்டிருந்தார். எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக தகவல் பரப்பியதற்தாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ஆயிரம் விளக்கு உட்பட பல பகுதிகளில் நீர் நிரப்ப படாததால் அவை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களை பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சியும் பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.