Chennai

News May 17, 2024

சென்ட்ரல்: ரயில் பெட்டி உணவகத்தில் கைவரிசை!

image

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டி உணவகத்தில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இர்பான். இவர் மே 11 அன்று உணவக கல்லா‌ பெட்டியில் இருந்த ரூ.1.66 லட்சம் ரொக்கம், ஊழியர்களின் பணம் ரூ.76 ஆயிரம் என ரூ.2.42 லட்சம் பணம் மற்றும் 6 விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றுவிட்டதாக உணவக மேலாளர் பாலாஜி பெரிய மேடு போலீசில் நேற்று(மே 16) புகார் அளித்துள்ளார்.

News May 17, 2024

சென்னை: மேலும் 4 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங்!

image

தி.நகரில் தனியார் பராமரிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 10 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. மேலும் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலை, ஷெனாய் நகர், வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

News May 17, 2024

சென்னை: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

image

சென்னை, பட்டாபிராம் துணைமின் நிலையத்தில் இன்று(மே 17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன் நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி.டி.எச்.ரோடு, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, காமராஜபுரம், சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News May 16, 2024

ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமின் மனு தள்ளுபடி

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறு காணொளியை ஒளிபரப்பிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதால் அவரது முன் ஜாமின் மனு காலாவதியானதாக கூறி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது மற்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அவரின் மனைவி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

News May 16, 2024

சென்னை: வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளை ஒட்டிய 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயரும். இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 16, 2024

பேருந்து வருகை விவரங்கள் குறித்த திரைகள்

image

ஓமந்தூரார் அரசினர் தோட்ட பேருந்து நிலையம், எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் பேருந்து நிறுத்தத்தில் அங்கு வர இருக்கும் பேருந்துகளின்‌ விவரங்கள் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்கள் சோதனைக்கு பின் சென்னையில் 50 முக்கிய இடங்களில் பேருந்து விவரங்கள் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் திரை வைக்கப்பட உள்ளது.

News May 16, 2024

சென்டர் மீடியனில் மோதிய மாநகர பேருந்து

image

திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்த போது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தின் சக்கரங்கள் தரம் இல்லாததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

News May 16, 2024

மருத்துவ மாணவர் தற்கொலை

image

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ். ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இழந்த பணத்தை மீட்பதற்காக தனது தந்தையிடம் ரூ‌.24,000 கேட்ட நிலையில் ரூ.4,000 மட்டுமே கொடுத்துள்ளார். விரக்தி அடைந்த தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 16, 2024

சென்னையில் வீடு புகுந்து கொலை

image

சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட் தெருவில் வசித்து வந்தவர் கௌதம் (25). இவர் தனது நேற்று வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜா (எ) ராஜா பாய் (28), பிரதீப் (எ) குள்ளு (26), தி.நகரை சேர்ந்த சுரேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

News May 16, 2024

காதல் தோல்வி : ஐடி ஊழியர் தற்கொலை

image

போரூர் காரம்பாக்கம், பொன்னி நகர் வல்லார் தெருவில் தனது தாயுடன் வசித்து வந்தவர் தினேஷ் கண்ணா (25). தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், இன்று காலை தனது அறையில் தாயின் புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தினேஷ் தான் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!