India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கேயம்பேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தள்ளுவண்டி கடை ஒன்றில் வடை சாப்பிட்டு, பணத்தை செல்போனில் அனுப்பினார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்னதாக பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருந்த நிலையில், தற்போது சிறிய கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாக தெரிவித்தார்.
திருவொற்றியூர் பகுதி ஏழாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சரவணா நகர் மற்றும் ஆர்.எம்.வீ நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் அவர்கள் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் உடன் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் இன்று(மார்ச் 27) பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், கொரட்டூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். மேலும், இத்தகைய தாமதத்திற்கு வருந்துவதாகவும் ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் எவர் வின் பள்ளி வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இல்லத்தில் திமுக வேட்பாளர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அருகில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா , சிற்றரசு உட்பட பலர் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.