India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அமிஞ்சிக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். உடனிருந்த அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மரண காரணம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறந்தவரையும் அவரது தாயாரையும் பாகிஸ்தான் அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி சென்னை தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
தண்டையார்பேட்டை – 9384094001, திருவொற்றியூர் – 9384094008, புரசைவாக்கம் – 9445000484, பெரம்பூர் – 9445000485, மாதவரம் – 9384094007, அயனாவரம் – 9384094003, அமைந்தகரை – 9384094002, அம்பத்தூர் – 9445000489, எழும்பூர் – 9445000486, மதுரவாயல் – 9384094006, மாம்பலம் – 9445000488, வேளச்சேரி – 9384094005, கிண்டி – 9384094004, ஆலந்தூர் – 9384094010, சோழிங்கநல்லூர் – 9384094009. ஷேர் செய்யுங்கள்
அக்னி நட்சத்திர வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 1ஆம் தேதி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
இளைஞர் நீதிகுழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 6ஆம் தேதிக்குள் இந்த <
திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 28) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அலெர்ட் கொடுத்துள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 -29 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். எனவே, பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (27.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
▶அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
▶ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்
▶எழும்பூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
▶சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
▶தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
▶திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
▶நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
▶ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
▶திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
▶முகப்பேர் மார்கண்டேசுவரர் கோயில்
▶பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.