Chennai

News August 21, 2025

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

News August 21, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று எங்கெல்லாம் நடைபெறும்?

image

சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

சென்னையில் நாளை கரண்ட் கட்!

image

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!

News August 20, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறை தினங்களான ஆக.23, 24 ஆகிய தேதிகளை முன்னிட்டு 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 340 பேருந்துகளும், சனியன்று 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை & ஈரோட்டிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News August 20, 2025

சென்னை ஐகோர்ட் வேலை! APPLY NOW

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி நிரலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குB.Sc(Computer Science), B.Sc (IT), BCA, MCA,M.Sc (Computer Science) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,31,500 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க செப்.9-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

News August 20, 2025

சென்னை: ZOHO-வில் வேலை! APPLY NOW

image

IT நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ZOHOவில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். பணிக்கு ஆக.22ம் கடைசி தேதி ஆகும். ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 20, 2025

சென்னை ஊர்க்காவல் படையில் வேலை

image

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 18 to 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூ.560-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். இப்பணிக்கு ஆக.30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபாலில் சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் 9566776222 என்ற எண்ணை அழைக்கலாம் (SHARE)

News August 20, 2025

சென்னைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட் பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தலைநகர் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. இதனால், சென்னை வாசிகளே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். SHARE பண்ணுங்க.

News August 20, 2025

சென்னையில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நாளை (20.08.2025) 10 இடங்களில் நடைபெற உள்ளன. மணலி, மாதவரம், இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.

News August 20, 2025

மெட்ரோ உதவி எண்கள் செயல்படாது: மெட்ரோ நிர்வாகம்

image

சென்னை மெட்ரோ ரயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உதவுவதற்கு எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உதவி எண்கள் தற்காலிகமாக செயல்படாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. உதவி எண்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

error: Content is protected !!