Chennai

News April 18, 2024

சென்னையில் ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள்!

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் 16 இடங்களில், பெண்களுக்கென பிரத்யேகமாக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருவோர் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும் பெண்களாவர். பெண்கள் மட்டுமின்றி இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

சென்னை – துபாய் விமான சேவை ரத்து

image

கனமழை எதிரொலியால் சென்னையில் இருந்து துபாய் செல்லக்கூடிய 5 விமானங்கள் நேற்று(ஏப்.17) ரத்து செய்யப்பட்டன. இதேபோல், மறு மார்க்கத்தில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் இன்று(ஏப்.18) இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News April 18, 2024

சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் பயணம்!

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாள் விடுமுறை என்பதாலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

News April 18, 2024

சென்னை: மருதாணி வைத்திருந்தால் ஓட்டு போடலாமா?

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை(ஏப்.19) நடைபெற உள்ளது. இந்நிலையில் கையில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பு என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இது குறித்து நேற்று(ஏப்.17) விளக்கமளித்த சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், “இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி; வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என தெளிவுபடுத்தினார்.

News April 18, 2024

சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர்

image

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.17) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார். சில மணி நேரத்திற்கு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், “ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்..” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News April 18, 2024

சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

image

தமிழ்நாடு முழுவதும் நாளை(ஏப்.19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.18ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கும், பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சென்ட்ரலுக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும் என தெற்கே ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 17, 2024

மெரினாவில் உலவும் சுறா எச்சரிக்கை

image

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 13ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மணிமாறன் என்பவரின் காலை சுறா மீன் கடித்ததாகவும் அவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News April 17, 2024

திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து

image

சென்னை 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று சென்னை மற்றும் வெளி மாவட்டத்தில் 1,168 திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 17, 2024

சென்னை வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

நாளை 3-ம் கட்ட தேர்தல் பயிற்சி

image

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, சென்னை
மாவட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி நாளை (ஏப்ரல்.18) காலை 9 மணிக்கு சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் நடத்தப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!