Chennai

News April 19, 2024

வாக்குச்சாவடியில் சந்தித்த தமிழிசை, பிரேமலதா

image

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் வாக்களித்தார். அவருடன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் வாக்களிக்க வருகை தந்தார். அப்போது, தமிழிசையும் பிரேமலதாவும் ஒருவருகொருவர் தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தினர். எதிரெதிர் அணியில் இருந்த நிலையிலும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

News April 19, 2024

மனசாட்சிப்படி வாக்களியுங்கள் : சிவகார்த்திகேயன்

image

சென்னை 149வது வார்டில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நமது உரிமை; வாக்களிப்பது நமது கடமை; முதல்முறை வாக்கு செலுத்தும் அனைவருக்கும் வாழ்த்துகள்; உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் வாக்கு செலுத்துங்கள் என்றார். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

News April 18, 2024

தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் செய்திகள் கண்காணிப்பு

image

சென்னை பெரிய மேடு மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான 19.04.2024 தேதி நடைபெறும் வாக்குப்பதிவினை முன்னிட்டு, ரிப்பன் கட்டட வளாகத்தில் தேர்தல் ஊடக மையத்தில் தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் தொடர்பான செய்திகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படுகிறது.

News April 18, 2024

நாளை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு

image

சென்னையில் நாளை காலை முதல் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது . மக்களவை தேர்தலையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய இந்த பயணம் ஏதுவாக இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட

News April 18, 2024

வடசென்னை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

வடசென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ <>க்ளிக்<<>> செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ <>க்ளிக் <<>>செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

சென்னையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

News April 18, 2024

சென்னையில் நாளை 20 ஆயிரம் போலிசார்

image

சென்னையில், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் ஆணையர்கள் பிரேமானந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் இன்றே உஷார்படுத்தப்பட்டுள்ளனர். லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 42 நாட்கள் பாதுகாக்கப்பட உள்ளன.

News April 18, 2024

அயனாவரம்: ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலா

image

சென்னை, அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் ஏப்.13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று(ஏப்.18) இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி எழுந்தருளி, சப்பரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற வருகைதருமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!