Chennai

News March 18, 2024

சென்னை: இனி அந்த பக்கம் போகாதீங்க..!

image

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

News March 18, 2024

சென்னையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் தேர்தல் பணிகள் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் 974 இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருப்பது நல்லது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

சென்னையில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி(வட சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன்(தென் சென்னை), தயாநிதி மாறன்(மத்திய சென்னை) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர்.

News March 18, 2024

தென்சென்னையில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

சென்னையில் புதிய டாஸ்மாக் கடை மூடல்

image

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

News March 17, 2024

வேளச்சேரியில் 120 நாய்கள் மாநகராட்சி மீட்பு

image

வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி  அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

News March 17, 2024

சென்னையில் பறக்கும் படை அதிரடி சோதனை

image

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக இன்று சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 17, 2024

சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

image

சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ₹1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து கேட்டறிந்தனர்.

News March 17, 2024

சூப்பர் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து!

image

நாவலூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

News March 17, 2024

சென்னை மக்களே..மின்சார ரயில்கள் ரத்து

image

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (17.03.2024) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!