India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதால், மாம்பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கைப்பற்றி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அஅபராதம் விதித்தனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான V.R.மாலுக்கு இன்று(ஏப்.23) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபமாகவே சென்னை மற்றும் பல இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமான பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி வழங்கும் வகையில், வழக்கமான பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது. பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து டூவீலர்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளில் செல்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அரங்கத்தில், இன்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,700க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ராட்சத கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வந்த கழுகுகள் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கழுகுகள் கிடைக்காததால் பூங்கா நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை – தடா சாலையின் அகலம் 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி 95.75% முடிந்து, மீதமுள்ள சாலையின் 1.4 கிமீ நீளத்திற்கு ஒப்பந்ததாரர் சமீபத்தில் பணியைத் தொடங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று(ஏப்.21) முதல் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும், முல்லை, ஜாதிமல்லி பூக்கள் ரூ.350க்கும், சாமந்தி, அரளிப்பூ ஆகியவை ரூ.250க்கும் விற்கப்படுகின்றன. மேலும் சம்பங்கி ரூ.400க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும் என விலை உயர்ந்து விற்பனையானது.
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 1.5% வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், குடிநீர் வடிகால் அதிகாரிகள், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இம்மாதம் 20ம் தேதி வரை ரூ.190 கோடி சொத்துவரி வசூலாகியுள்ளது. மேலும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரி செலுத்தி 5 சதவீத தள்ளுபடியை பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக உள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.unom.ac.in/ என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், பொருளாதாரத்தில் பின்தங்கியும் உள்ள மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.