India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாவட்ட நீதித்துறையில் 191 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை<
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் நேற்று(ஏப்.28) புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக, ராதா மீது சென்னையில் வழக்கு பதிந்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீதும் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. இதில் சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகமாக கையாளும் இடமாகும். தற்போது வீராணம் ஏரி வறண்ட நிலையிலும், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 6.88 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான எரிகளில் நீர் இருப்பு 11.75டிஎம்சி ஆக உள்ளது. இந்த கோடையை சென்னை தாக்குபிடிக்குமா?
சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 30 – ம் தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 30ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் போதிய தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையில் வாகன ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளனர். அதாவது வாகன பதிவெண் பலகையில் தங்களின் பணியை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை உடனே நீக்க மே மாதம் 1ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்துக்குள் வாகன பதிவெண் பலகையில் உள்ள ஸ்டிக்கரை நீக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த தாம்பரம் சாலையில் உள்ள பிரியாணி கடையில் சௌந்தர்ராஜன் என்பவர் செட்டிநாடு சிக்கன் பார்சல் வாங்கியுள்ளார். வீட்டில் சென்று பார்த்த போது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், கடை உரிமையாளரிடம் முறையிட்ட போது, சூடாக கொடுக்கப்பட்ட சிக்கனில் உயிரோடு எப்படி புழு வரும் என்றார். இதுகுறித்து அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
சர்.பிட்டி தியாகராயர் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. சென்னையில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும் என்றார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மே 1ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் மே 12ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06012) மே 5ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை அரசு அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இதில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுள்ளன. 1851 ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரில் இருந்து பழைய அருங்காட்சியகம் 1854 ஆம் ஆண்டு பந்தியன் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின் ஆண்டுக்காண்டு விரிவடைந்து கொண்டே இருந்தது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.