Chennai

News April 3, 2024

யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி

image

ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் UPI மூலமாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் ஏப்.1 முதல் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைய முன்பதிவில்லாத கவுன்டர்களில் டிக்கெட்டுக்கான பணத்தை UPI மூலம் செலுத்தலாம். மேலும் சென்னை கோட்டத்தில் சில ரயில் நிலையங்களி இந்த வசதி சோதனை அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

News April 3, 2024

வள்ளலார் சர்வதேச மையம்: அரசு பதிலளிக்க உத்தரவு

image

சத்திய ஞானசபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்க கோரி பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவான தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு ஏப்.,24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News April 3, 2024

சென்னையில் 2 இடங்களில் சிபிஐ சோதனை

image

சென்னை, அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் இன்று(ஏப்.3) சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சூளைமேடு, பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 3, 2024

சென்னை: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

image

சென்னை, கதீட்ரல் சாலை அமராவதி ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலை பாதாள சாக்கடை மேன்ஹோல் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கண்ட இடத்தில் 7 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று(ஏப்.3) முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News April 2, 2024

ELECTION: சந்தேகம் இருக்கா?

image

மக்களவைத் தேர்தல்-2024 ஏப்.19ம் தேதி, தமிழ்நாட்டி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். அதே போன்று தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உங்களுக்கு தேர்தல் குறித்த சந்தேகம், உதவிகள் தேவைப்படின் ‘1950’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற எண்ணுக்கும் அழைக்கலாம்.

News April 2, 2024

₹ 1, 800 கோடி வசூலித்த சென்னை மாநகராட்சி

image

பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் சொத்து வாரியாக மட்டும் ரூ. 1, 800 கோடி வசூலாகி உள்ளது.

News April 2, 2024

சென்னைக்கு வருகை தந்துள்ள துணை ராணுவ வீரர்கள்

image

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று முதல் வருகை தர உள்ளனர். இவர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையிலும் பதட்டமான வாக்கு சாவடியில் கண்காணிக்க உள்ளனர் இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

News April 2, 2024

சென்னை:மீன் வியாபாரியிடம் பணம் பறிமுதல்!

image

காசிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரி தமிழரசன் போலீசார் உடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டை சேர்ந்த குமார் என்பவர் மீன் வியாபாரத்திற்காக மீன் வாங்க ரூபாய் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளார்.பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்திற்கு அனுப்பி உள்ளனர்.

News April 1, 2024

சக கைதியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

image

புழல் மத்திய விசாரணை சிறையில், கஞ்சா வழக்கில் கைதான எண்ணூரை சேர்ந்த கார்த்திக் 23 ராஜேந்திரன் 31 அயனாவரம் லோகு 23 ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இவரது செருப்பு காணாமல் போனதால் மற்றொரு கைதியான அமைந்த கரையை சேர்ந்த முகமது அமான் 43 என்பவர் திருடியதாக கூறி மூவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் முகமது அம்மானை தாக்கிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 1, 2024

குளுகுளு மழை..சென்னை கிளைமேட் என்ன..?

image

இன்று தென்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!