Chennai

News May 31, 2024

மக்களுக்காக மோடி தவம் செய்கிறார்: தமிழிசை

image

மோடியின் தியானம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தவம் ஓர் ஆன்மீக கலை. அதை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் பிரதமர் மோடி குமரியை தேர்ந்தெடுத்ததற்கு பெருமை கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக தியானம் செய்வதை தேர்தல் விதிமீறல் என எதிரணியினர் கூறுவது காழ்ப்புணர்ச்சி. மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

News May 31, 2024

சிலைகளை மீட்க தயக்கம்: பொன்.மாணிக்கவேல்

image

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று (மே.30) புகாரளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வந்தேன். தமிழ்நாட்டில் இருந்து 2,622 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுகிறது” என்று கூறினார்.

News May 31, 2024

சென்னையில் மின்தடையால் மக்கள் அவதி 

image

சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு, ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

News May 31, 2024

தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பகுதியில் மே.31 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு தேதிகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News May 30, 2024

தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு பகுதியில் மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு தேதிகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளd. ஆகவே ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News May 30, 2024

சென்னை: சின்னத்திரை நடிகை பகீர் புகார் – 5 பேர் கைது

image

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் வளசரவாக்கம் பகுதியில் சின்னத்திரை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,”ஆண் நடிகர் ஒருவரின் கார் ஓட்டுநர் முருகேஷ் என்பவர் 5 பேருடன் நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்”. இதையடுத்து முருகேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 30, 2024

சென்னை வெப்பநிலை விவரம்!

image

சென்னையில் நேற்று (மே.29) பதிவான வெப்பநிலையின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 41.6°c (106.88 °F) ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 40.4°c (104.72 °F) ஆகவும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

சென்னையில் வெப்பம் அதிகமாக இருக்க காரணம் இதுதான்

image

சென்னையில் கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரிமெல் புயல் உருவானதால் தமிழ்நாட்டுக்கு இயல்பாக காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர பகுதியில் இருந்து வெப்பமான தரைக்காற்று தமிழ்நாடு நோக்கி வீசுகிறது. இதனால் சென்னையில் வெப்பம் அதிகமாக இருக்கும்” என கூறியுள்ளார்

News May 30, 2024

பீர் பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளி பலி

image

கோயம்பேட்டில் நேற்று இரவு பணி முடித்து மதுபோதையில் சேகர் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே மார்க்கெட்டில் பணிபுரியும் சக்தி மதுபோதையில் அவரது நண்பரை பார்க்க வந்த போது தவறுதலாக சேகரை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சேகர் சக்தியை அவதூறாக பேசியதால் சக்தி அருகே கிடந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 30, 2024

சென்னை: கேலி செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

image

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டீ கடையில் நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார் என்பவர் இன்று(மே 30) டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது கடையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பெண் கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியுள்ளார். காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!