India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை- திருவண்ணாமலை இடையே ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்ட மெமு ரயில் சேவை இன்று(2.5.24) மாலை 6 மணிக்கு தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், தி.மலைக்கு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும், பின் தி.மலையில் இருந்து மறுநாள் 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 9.50 மணிக்கு வந்தடையும்.
வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் கே.ஜி.எஃப் என்ற பெயரில் விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பு பணிபுரிந்த ரிஸ்வான் என்ற ஊழியரை கடந்த மாதம் ஆட்களை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நாசர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் பெயரில் சிலர் போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாசர் பெயரில் போலி கணக்குகள் மூலம் நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் சென்னையில் தண்ணீர் பந்தலை திறக்கலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை. இதன் மூலம் எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது. கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடைபிடிக்க வேண்டும் என்றார்.
சென்னை- தி.மலை இடையே ரூ.50 கட்டணத்தில் நாளை(2.5.24) முதல் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டவுள்ளது. சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு தி.மலை சென்றடையும். தி.மலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50க்கு சென்னை வந்தடையும். குறைந்த கட்டணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில் சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷா(24). திருமணமாகாத இவருக்கு, உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் 7 மாதமாகி குறை பிரசவத்தில், தனக்குத் தானே பிரசவம் பார்த்து அதனை கொலை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் வரும் ஜூலை மாதத்தில் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று(மே 1) உறுதியாகியுள்ளது. மேலும், அவ்விடத்தில் ரூ.823 கோடியில் போக்குவரத்து முனையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள திரையரங்குகளில் ‘பில்லா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பில்லா’ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உழைப்பாளர் தின விடுமுறை என்பதால் காலை முதல் அஜீத் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். பேனருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று(மே 1) விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அத்துடன், பயணிகள் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.