India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார்.
சென்னை, மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. 10 ஆம் வகுப்பு மாணவரான இவர் மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தேர்வு முடிவுகளை காண்பதற்காக இன்று(மே 10) காலை புறப்பட்ட ஜீவா, மதுரவாயல் பாலத்தின் கீழே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் தப்பிச்சென்ற நிலையில், லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 79.07% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.4 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் சென்னை மாவட்டம் 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவர் 2019ம் ஆண்டு வெளியான ‘பொட்டு’ படத்துக்குப் பிறகு திரையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் இன்று(மே 10) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நமீதா, தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு மேல் கோயில் அருகில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் 88.21% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.99% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.34% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 5ம் தேதி 7 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் 14 ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறியுள்ளனர்.
காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காமராஜர் நினைவிடமானது கோடிக்கணக்கான மக்களுக்கு புனித இடம். அவரின் நினைவிடத்தை முறையாக பராமரிப்பது அவசியமானது. அதை முறையே செய்ய தவறிய தமிழ்நாடு அரசு கடமை உணர்வோடு பராமரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அவரிடம் 800 கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து சிலம்பரசனை இன்று(மே 9) கைது செய்தனர்.
எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(28). பொறியியல் பட்டதாரியான இவர் வேலையின்றி இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தீபக்(28) என்பருடன் அறிமுகமாகியுள்ளார். தீபக் தனது உறவினர் பெங்களூர் ஐடி கம்பெனியில் மேலாளராக உள்ளதாகவும் அவரிடம் சொல்லி வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ 20 லட்சத்தை ஸ்ரீகாந்திடம் பெற்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் தீபக்கை கைது செய்தனர்.
சென்னையில் நாய் வளர்க்க உரிமம் பெறும்படி மாநகராட்சி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “சென்னையில் நாய் வளர்க்கும் அனைவரும் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் நாய் வளர்ப்பவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. 2023ல் 1,500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். 3 நாட்களில் உரிமம் பெற 1,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.