Chennai

News May 12, 2024

சென்னை ஆணையருக்கு ஷாக் கொடுத்த மெசேஜ்

image

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு சாதாரண மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஆணையரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சைபர் குற்றத்திற்கு முடிவு இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News May 11, 2024

மாநகராட்சி ஆணையருக்கு ஷாக் கொடுத்த மெசேஜ்

image

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு சாதாரண மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஆணையரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சைபர் குற்றத்திற்கு முடிவு இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News May 11, 2024

மெட்ரோ வழித்தடம் ஆய்வு அறிக்கை தயாரிக்க முடிவு

image

மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.

News May 11, 2024

மெரினாவில் தீடிரென தீப்பிடித்து எரிந்த கார்

image

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 11, 2024

செல்லப்பிராணிகளுக்கு செக் வைத்த மாநகராட்சி

image

சென்னையில் உள்ள பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு இன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News May 11, 2024

சென்னை: மின்சார ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சில மின்சார ரயில்களின் சேவை நாளை(மே 12) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பயண திட்டங்களை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 11, 2024

சென்னையில் தொடரும் சோதனை!

image

சென்னையில் மசாஜ் என்ற பெயரில் ஆங்காங்கே பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்து வருகின்றனர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று(மே 10) சோதனை செய்தனர்.

News May 11, 2024

கோயம்பேடு பகுதியில் இன்று கரண்ட் கட்!

image

சென்னை கோயம்பேடு மார்க்கெட் துணை மின் நிலையத்தில் இன்று(மே 11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோயம்பேடு, கோயம்பேடு சந்தை, சீனிவாச நகர், பக்வத்சலம் நகர், மெட்டுகுளம், நியூ காலனி, திருவீதியம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை 11 முதல் நண்பகல் 12 வரை மின் விநோயோகம் இருக்காது.

News May 10, 2024

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!

image

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுடன் பதிவு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும். இணைய வழயில் ரூ.50 செலுத்தி செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

சென்னையில் நகை கடையில் குவிந்த பொதுமக்கள்

image

சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினர்.

error: Content is protected !!