Chennai

News April 30, 2024

பேருந்து நிலையம் இடமாற்றம்

image

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனால், தீவுத்திடலுக்கு தற்காலிகமாக பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

News April 30, 2024

சென்னை: தயார் நிலையில் சுகாதார மையங்கள்!

image

சென்னையில் நிலவும் கடுமையான வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்க நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளதாகவும், குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் .

News April 30, 2024

கோயம்பேடு அருகே கொலையாளி கைது!

image

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பொன்மாலா, அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த வெங்கடேசனுடன்(36) தனிமையில் இருந்துள்ளார். இதனை பொன்மாலாவின் கணவர் துரைப்பாண்டியன்(52) கையும் களவுமாக பிடிக்கவே, அவரை வெங்கடேசன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடினார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் கொலை செய்தது உண்மை என தெரியவர இன்று வெங்கடேசனை கைது செய்தனர்.

News April 30, 2024

வண்டலூர் பூங்கா இன்று இயங்கும்

image

சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு செவ்வாய் கிழமைதோறும் வார விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று(ஏப்.30) வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது. வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

சென்னை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

சென்னை, மீனம்பாக்கத்தில் யில் நேற்று (ஏப்.29) 37.8° பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

சென்னை: பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை முன்பதிவு நேற்று(ஏப்.29) தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 044 – 25360041 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 30, 2024

சென்னை: நாளை வரை குடிநீர் கட்!

image

சென்னை, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(ஏப். 30) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை அடையாறு பகுதி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

News April 30, 2024

கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் இன்று கரண்ட் கட்!

image

கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இன்று(ஏப்.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லை கங்கா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நங்கநல்லூரின் ஒரு பகுதி, தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் மின்தடை ஏற்படும். வெயில் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

News April 29, 2024

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 8 பேர் கைது

image

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார், டிக்கெட்டுகளை விற்ற சரவணன், நவீன் குமார், அவுதாப் ஹாசன், காளி, தினேஷ்குமார், பரத், கங்காதரன், ராஜேஷ் ஆகிய 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

சென்னை: காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை

image

சென்னையில் சமீப காலமாக காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் ஒரு சிலரின் செயல்பாடுகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. எனவே பணியில் இருக்கும் போது முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்தால், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக் கூடாது. மீறினால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!